என்னை அறிந்தால் ஜனவரி 29-ல் வெளியாகும்- தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் அறிவிப்பு!
அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.
தியேட்டர்கள் பற்றாக்குறை, பட வேலைகளில் இன்னும் கொஞ்சம் முடியாமலிருப்பது போன்ற காரணங்களால் இந்தப் படம் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போகிறது.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்துள்ள என்னை அறிந்தால் பொங்கலுக்கு வெளியாகும் என கடந்த இரு மாதங்களாக அறிவித்தனர். தினசரிகளிலும் விளம்பரங்கள் செய்து வந்தனர்.
பொங்கலுக்கு ஷங்கர் இயக்கிய ஐ மற்றும் விஷாலின் ஆம்பள படங்கள் அதிக அரங்குகளில் வெளியாக உள்ளன.
இன்றைய தேதி வரை பொங்கல் வெளியீடு என்று கூறப்பட்ட என்னை அறிந்தால், திடீரென போட்டியிலிருந்து இன்று விலகிக் கொண்டது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறுகையில், "பொங்கலுக்கு படத்தை வெளியிடாத நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம் படத்தின் வேலைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே இரு வாரங்கள் கழித்து ஜனவரி 29-ம் தேதி வெளியிடுகிறோம்," என்றார்.
அஜீத் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இரண்டு வாரங்கள்தானே... பொறுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நல்ல அரங்குகள் கிடைக்கும்!


Click it and Unblock the Notifications











