குடும்ப பஞ்சாயத்தில் இருந்து பாம்பு பஞ்சாயத்திற்கு தாவிய நடிகை ஸ்ரீப்ரியா
சென்னை: சன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா? யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும் என நடிகை ஸ்ரீப்ரியா விமர்சித்துள்ளார்.
நடிகைகள் கணவன், மனைவி இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக சீனியர் நடிகையான ஸ்ரீப்ரியா குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
விஜய் டிவி
சன் டிவியில் வரும் பாம்பு தொடர்பான தொடரை விஜய் டிவி பத்து மணி பாம்பு என்று விமர்சித்துள்ளது, விஜய் டிவியுமா? யாராவது கோபம் அடைவது என்றால் அது நானாகத் தான் இருக்க வேண்டும்.
சன் டிவி
டிஆர்பி ரேஸில் பிற சேனல்களை விட முன்னணியில் உள்ளது சன் டிவி. உங்களால் புதுமையாக யோசிக்க முடியாதா?

நடிகை
குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்தும் நடிகைகளின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து வருகிறார் ஸ்ரீப்ரியா. ட்விட்டரில் ஸ்ரீப்ரியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
யார்?
சிலரின் அலம்பல் தாங்க முடியல, உளரலுக்கு உதாரணம் 'என்னப்பாத்து சிலருக்கு தாழ்வு மனப்பான்மை,பயம்,எனக்கு நான் யாருன்னு தெரியும்'பாவம் அரை குடம். இதை கூட ஸ்ரீப்ரியா ஒரு நடிகையை மனதில் வைத்து தான் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











