Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூர்யா படத்திலிருந்து நீக்கப்பட்டாரா யுவன்?
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் மாஸ் படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா திடீரென மாற்றப்பட்டதாகவும், அவருக்கு பதில் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட்பிரபுவின் முதல் படத்திலிருந்து அவர் படங்களுக்கு இசையமைப்பவர் யுவன் சங்கர் ராஜாதான். அத்தனைப் படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
அதேபோல, சூர்யாவுக்கும் ராசியான இசையமைப்பாளர் யுவன்தான். சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் தொடங்கி பல படங்களுக்கு யுவன் இசை தந்துள்ளார்.
வெங்கட் பிரபு - சூர்யா கூட்டணியில் மாஸ் படம் ஆரம்பித்த போது, இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஆனால் சூர்யாவுக்கும் யுவனுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மே 1-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாடல்களை இன்னும் முடித்ததுத் தராமல் யுவன் தாமதம் செய்ததால் அவருக்குப் பதில் தமனை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் வெங்கட்பிரபுவைக் கேட்காமலேயே இந்த முடிவை சூர்யாவும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீனும் மேற்கொண்டதாகவும், இதனால் வெங்கட்பிரபு கோபத்துடன் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இன்னொரு பக்கம், ஒரு பாடலுக்கு மட்டும் தமன் இசையமைப்பதாகவும், மற்றபடி யுவன் சங்கர்தான் இசையமைப்பாளர் என்றும் கூறுகிறார்கள். படத்தின் ஒரு பாடலுக்கு தமன் இசையமைத்ததால் இப்படி ஒரு செய்தி பரவியதாகவும் கூறப்படுகிறது.
உண்மை என்ன என்பதை யுவனோ ஸ்டுடியோ கிரீனோதான் விளக்க வேண்டும்!