Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஓடிடியில் வெளியாகும் அரண்மனை 3 படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை : ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் படம் அரண்மனை 3.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வசூலில் சாதனை புரிந்துள்ளது.
கையில் சீட்டு கட்டு… பக்கத்தில் சரக்கு பாட்டில்… காஜலை விளாசும் நெட்டிசன்ஸ் !
இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ள நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை 3 படம்
நடிகர் ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிவரும் படம் அரண்மனை 3. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த போதிலும் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.
சத்யா இசை
சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. அரண்மனையின் முந்தைய படங்களின் சாயல் இந்தப் படத்திலும் இருந்ததாக விமர்சகர்கள் விமர்சனம் செய்தனர். தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் சுந்தர் சிக்கே முக்கியத்துவம் உள்ளதாகவும் ஹீரோக்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது.
ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் ஓடிடியிலும் தற்போது ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜி5 நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தப் படம் வரும் 12ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை கலாட்டா
விவேக் நடித்துள்ள இந்தப் படத்தில் யோகிபாபு, மனோபாலா உள்ளிட்டவர்களும் நகைச்சுவையில் பின்னி பெடலெடுத்திருந்தனர். சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், அரண்மனையின் முதல் இரண்டு பாகங்களை போலவே பல காட்சிகள் இதில் உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.
சுந்தர் சி விளக்கம்
முன்னதாக படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பது சவாலானது என்று சுந்தர் சி தெரிவித்திருந்தார். இதைவிட புதிய படம் ஒன்றை இயக்குவது எளிதானது என்றும் அவர் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு ஏற்றபடியே இந்தப் படம் விமர்சனங்களை பெற்றது.
ரசிகர்களை கவர்ந்த படம்
ஆயினும் திரையரங்குகளில் இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த படமாகவே அமைந்தது. இந்நிலையில் கொரோனா அச்சம் உள்ளிட்டவை காரணமாக திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாதவர்கள் தற்போது ஓடிடியில் இந்தப் படத்தை பார்க்கும்படியாக வரும் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதற்கென அதிகப்படியான தொகை கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.