பப்ளிக்கா இப்படி பண்ணலாமா.. புது பாய் ஃபிரெண்ட் உடன் பூனம் பாண்டே அட்டகாசம்.. விளாசும் ரசிகர்கள்!
மும்பை: தனது புது பாய் ஃபிரெண்ட் உடன் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே பொதுவெளியில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகின்றனர்.
கவர்ச்சி நடிப்பை எல்லாம் தாண்டி முழு ஆபாச பட நடிகையாகவே சோஷியல் மீடியாவை அதிர வைத்தவர் பூனம் பாண்டே.
கோவாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியதற்காக இவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லை மீறிய ஆபாசம்
பாலிவுட் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆபாசத்தை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பினார். முழு நிர்வாணமாக போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த அவர் ஆபாச படங்களை தயாரித்து வந்த சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவரை பிரிந்து
திருமணமாகி ஹனிமூனுக்கு சென்ற இடத்திலேயே கணவர் சாம் பாம்பே காட்டுமிராண்டித் தனமாக தாக்குகிறார், பாலியல் தொல்லை கொடுக்கிறார் என புகார் அளித்து புருஷனை போலீஸில் சிக்க வைத்தார். அதன் பின்னர் மன்னிப்பு கேட்டு இருவரும் ஒன்று சேர்ந்த நிலையில், மீண்டும் ஒரு புகார் அளித்து கணவரை ஒரேயடியாக பிரிந்தார்.

கங்கனா ரனாவத் ஷோ
இங்கே எப்படி சர்ச்சையான பிரபலங்கள், விவாகரத்தான சீரியல் நடிகைகளை அழைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடத்துகின்றனரோ அதே போல கங்கனா ரனாவத் இந்தியில் நடத்திய ஓடிடி ஷோவான லாக்கப் நிகழ்ச்சியில் பூனம் பாண்டே போட்டியாளர் என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

சக போட்டியாளருடன் நெருக்கம்
அந்த ஓடிடி ஷோவில் சக போட்டியாளராக கலந்து கொண்ட கரண்வீர் போஹ்ரா உடன் தற்போது பூனம் பாண்டே படு நெருக்கமாக பல இடங்களுக்கு டேட்டிங் செய்து வருவது அம்பலமாகி உள்ளது. நேற்று முந்தினம் இருவருமே மும்பையில் உள்ள ஒரு முக்கிய வீதியில் பப்ளிக்காக பண்ண அந்த விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அடுத்த ஆடு சிக்கியிருச்சு
ஏற்கனவே தயாரிப்பாளர் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை போலீஸில் சிக்க வைத்தார். இந்நிலையில், லாக்கப் போட்டியாளர் கரண் போஹ்ராவுடன் பூனம் பாண்டே சுற்றி வருவதை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த ஆடு சிக்கியிருச்சு போல என பங்கமாக கலாய்த்து வருகின்றன்ர்.

கன்ட்ரோல் பண்ணுடா அம்பி
இப்படி பப்ளிக்காவே எல்லை மீறினால் எப்படி, கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுடா அம்பி என நெட்டிசன்கள் கரண் போஹ்ராவை கலாய்த்து வருகின்றனர். சீக்கிரமே பூனம் பாண்டேவிடம் இருந்து இன்னொரு பரபரப்பு புகார் வரும் என்று எதிர்பார்க்கலாம் போல என்றும் பங்கம் பணி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











