Just In
- 4 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 36 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- News
பிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம்
தயாரிப்பு: பிரண்ட்ஸ் சினிமா.
நடிப்பு: கரன், மீனாட்சி, வடிவேலு, சக்தி குமார்.
இசை: தீனா
கேமரா: ஸ்ரீதர்.
இயக்கம்: மூர்த்தி.
கொக்கி மூலம் நாயகனானா கரண் நடித்துள்ள இரண்டாவது ஹீரோ படம் கருப்பசாமி குத்தகைதாரர். அறிமுக இயக்குநர் மூர்த்தியின் திறம்பட்ட இயக்கத்தில், கரண், வடிவேலுவின் அட்டகாச நடிப்பில் படு அலப்பறையாக வந்துள்ளது கருப்பசாமி குத்தகைதாரர்.
மதுரைதான் படத்தின் கதைக்களம். இதனால் படத்தை படு ஜாலியாக கொண்டு சென்றுள்ளனர். சிம்பிளான கதைதான். ஆனால் அதை அழுத்தமாகவும், அழகாகவும் சொல்லியுள்ளனர்.
ஜெராக்ஸ் என்ற செல்லப் பெயர் கொண்டவர் கருப்பசாமி (கரண்). கடுமையான உழைப்பாளி, மதுரை பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
கருப்பசாமிக்கு மிமிக்ரியும் கைவந்த கலை. ரஜினி போல நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. சைடில் டான்ஸ் ட்ரூப்பும் வைத்து நடத்துகிறார்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், படு ஜாலியாக வாழ்ந்து வரும் கருப்பசாமியின் வாழ்க்கையில், ராசாத்தி குறுக்கே வருகிறாள். மருத்துவக் கல்லூரி மாணவி ராசாத்தி.
கருப்பசாமியின் சைக்கிள் ஸ்டாண்டில்தான் தனது சைக்கிளை தினசரி நிறுத்துவாள் மீனாட்சி. அதை வைத்து இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. கருப்பசாமியின் டீசண்ட்டான பழக்கம் ராசாத்திக்குப் பிடித்துப் போக நட்பு காதலாக மாறுகிறது.
கருப்பசாமிக்கும் ராசாத்தி மீது ஒரு இதுதான். இருந்தாலும் காதலை விட படிப்புதான் மிகவும் முக்கியம் என நினைக்கும் கருப்பசாமி, முதலில் நன்கு படித்து, நல்ல டாக்டராக வா,அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான் என அறிவுரை கூறுகிறார்.
ராசாத்தியின் காதல் அவரது குடும்பத்துக்குத் தெரிய வருகிறது. படிப்பை நிறுத்த முடிவு செய்கிறார்கள். இதை அறிந்த கருப்பசாமி, ராசாத்தியின் பெற்றோரிடம் அப்படிச் செய்யாதீர்கள் என கெஞ்சுகிறார். அப்படியனால் உனது காதலை நீ மறக்க வேண்டும் என்கிறார்கள் ராசாத்தியின் பெற்றோர். இறுதியில் கடவுளின் துணையுடன் காதலில் வெல்கிறார் கருப்பசாமி.
அட்டகாசமான பாடி லாங்குவேஜுடன், திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார் கரண். கருப்பசாமியாகவே மாறி நடித்துள்ளார். எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை.
புதுவரவு மீனாட்சியின் நடிப்பும் தூளாக இருக்கிறது. மும்பைக்காரப் பெண்ணாக இருந்தாலும், மதுரைக்கார பெண்ணின் குணாதிசயங்களை படு லாவகமாக வெளிக்காட்டியுள்ளார்.
வடிவேலு படத்தின் பெரும் பலம். அச்சு அசல் மதுரைக்கார பார்ட்டி ஆச்சே, பின்னி எடுத்துள்ளார். வசனத்திலும் சரி, பண்ணுகிற லந்திலும் சரி, துள்ளி விளையாடியுள்ளார்.
தீனாவின் இசையில் இரு பாடல்களைக் கேட்க முடிகிறது. மற்றவை கொட்டாவிக்கு வழி வகுக்கின்றன. படத்தின் வேகமான ஓட்டத்துக்கு பாடல்கள்தான் பெரும் தடையாக இருக்கின்றன. இத்தனை பாட்டு கொஞ்சம் ஓவர் தாண்ணே.
மதுரை மற்றும் சுற்றுப் புறங்களை தனது கேமராவால் அழகாக காட்டி அசத்தியிருக்கிறார் கேமராமேன் ஸ்ரீதர்.
சங்கடப்படுத்தாமல் ரசிக்க வைத்திருக்கிறார் கருப்பசாமி.