Don't Miss!
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
மான் கராத்தே- விமர்சனம்
-எஸ் ஷங்கர்
நடிப்பு: சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, வம்சி கிருஷ்ணா, சதீஷ்
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: சுகுமார்
தயாரிப்பு: எஸ்கேப் ஆர்டிஸ்ட் - ஏ ஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்
கதை: ஏ ஆர் முருகதாஸ்
இயக்கம்: திருக்குமரன்
நான்கைந்து மாதங்களுக்குப் பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால்..?
இந்த சுவாரஸ்ய கேள்வியையே ஒரு திரைக்கதயைக்கியிருக்கிறார்கள், கொஞ்சம் அசுவாரஸ்யமாக!
காட்டுக்கு சுற்றுலா செல்லும் ஐடி பணியாளர்கள் சதீஷ் அண்ட் கோ, அங்கே ஒரு சித்தரைச் சந்திக்கிறார்கள். அவரிடம் நான்கு மாதங்கள் கழித்து ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் வரும் தினத்தந்தி செய்தித்தாளைக் கேட்கிறார்கள். சித்தரும் கொடுக்கிறார்.
அதில் பார்த்தால், இவர்கள் வேலைப் பார்க்கும் ஐடி நிறுவனத்தை நான்கு மாதங்களுக்கு முன்பே மூடிவிட்டதாக செய்தி வந்திருக்கிறது.
நம்ப முடியாமல் காட்டிலிருந்து கம்பெனிக்குத் திரும்பினால்... செய்தி உண்மையாகிவிடுகிறது. ஊழல் பிரச்சினையில் கம்பெனியை மூடுவதாக அறிவிப்பு வருகிறது.
ஆஹா.. அப்போ இந்த பேப்பரில் வந்திருப்பதெல்லாம் நடக்கப் போகிறதா என்ற ஆர்வத்துடன், செய்திகளை மேய, அதில் பீட்டர் என்ற ராயபுரம் பார்ட்டிக்கு குத்துச் சண்டையில் ரூ 2 கோடி பரிசு விழுந்ததாக இன்னொரு செய்தி.
உடனே அந்த பீட்டரைத் தேடிப் போகிறார்கள். அந்த பீட்டர்தான் சிவகார்த்திகேயன். குத்துச் சண்டையென்றால் என்னவென்றே தெரியாத சிவகார்த்தியை குத்துச் சண்டைக்கு தயார்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிவகார்த்திக்கு இதில் நாட்டமில்லை.
இடையில் ஹன்சிகாவுக்கும் சிவகார்த்திக்கும் காதல். விளையாட்டில் மிகுந்த ஈடுபாாடு காட்டும் ஹன்சிகா வேண்டுமென்றால், குத்துச் சண்டையில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என்று சிவகார்த்துக்கு தூண்டில் போடுகிறார்கள்.
இந்த நேரத்தில் உண்மையிலேய் பீட்டர் என்ற பெயரில் வேறு ஒரு குத்துச்சண்டை வீரன் இருப்பது தெரிய வருகிறது. இந்த பீட்டரைத்தான், கைப்புள்ள சிவகார்த்திகேயன் தோற்கடிக்க வேண்டும். தோற்கடித்து பரிசு வென்றாரா... ஹன்சிகா கைப்பிடித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
சிவகார்த்திகேயனுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் வேறு டிபார்ட்மென்களில் கலக்க சரியான வாய்ப்பு. குறிப்பாக நடனக் காட்சிகளில் நிஜமாகவே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
திருக்குறளை வைத்து காமெடி காட்சிகள் அமைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
ஹன்சிகா மெலிந்து இன்னும் அழகாகக் காட்சி தருகிறார். க்ளைமாக்ஸில் நடிக்க அப்படி திணறுகிறார்.
நடுவராக வரும் சூரி, ஐடி காரராக வரும் சதீஷ், நிஜ குத்துச் சண்டை வீரராக வரும் வம்சி கிருஷ்ணா என அனைவருமே தங்கள் கேரக்டர்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
முருகதாசின் கதை ஓகேதான். ஆனால் அதற்கு திரைக்கதை எழுதிய திருக்குமரன் பிற்பாதியில் ஏகத்துக்கும் சொதப்பியிருக்கிறார். முன்பாதியில் இருந்த வேகமும் சுவாரஸ்யமும் பின்பாதியில் சுத்தமாக இல்லை.
சிவகார்த்திகேயன் இன்ஸ்டன்ட் பாக்ஸராவதெல்லாம், டீக்கடைப் பையன் திடீரென நாசா விஞ்ஞானியாகிவிடுவது மாதிரிதான் இருக்கிறது.
அனிருத்தின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு ப்ளஸ்.
திரைக்கதையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் திருக்குமரன் இந்தப் படத்தில் க்ளீன் வின்னராக இருந்திருப்பார்... ஜஸ்ட் மிஸ்!