Just In
- 2 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 3 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 7 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நெருப்புடா... ரசிகர்களைப் பற்றிக் கொள்ளுமா?
விக்ரம் பிரபு நிக்கி கல்ராணி நடிப்பில் புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் சொந்தத் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நெருப்புடா'. தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையை பற்றிய படம் என்று சொல்லப்பட்டது.
விக்ரம் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் நால்வரும் சிறுவயதில் இருந்தே அவர்களது பகுதியில் நடக்கும் தீ விபத்துகளில் துணிச்சலாக நுழைந்து உயிர்களை காப்பாற்றுபவர்கள். தீயணைப்பு வீரர்கள் ஆவதற்கான தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருப்பவர்கள், தேர்வுக்கு முதல் நாளில் ஒரு விபத்துக்கு காரணமாகிறார்கள். அந்த விபத்தின் விளைவுகள்தான் கதை.
பார்த்துப் பழகிய பழைய கதையை கையில் எடுத்து அதில் ஒவ்வொரு காட்சியிலும் ட்விஸ்ட்களால் திரைக்கதையை நிரப்பியிருக்கிறார் இயக்குநர் அசோக் குமார்.
தீயணைப்பு வீரராவதையே லட்சியமாக கொண்டு நண்பர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் கேரக்டர் விக்ரம் பிரபுவுக்கு. கும்கி படத்துக்கு பிறகு தனது இறுக்கமான நடிப்பால் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். நிக்கி கல்ராணிக்கு அதிகம் வேலையில்லை. விக்ரம் பிரபுவை காதலிப்பதும் அவருடன் டூயட் பாடுவதற்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்.
வில்லனாக மிரட்டியிருக்கிறார் மதுசூதன் ராவ். ஐசரி வருண், நாகி நீடு, பொன்வண்ணன், ஆகியோர் கச்சிதம். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
ஆர்டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு த்ரில் டெம்போவை கூட்டுகிறது.
லாஜிக்கலாக கேள்விகள் வந்துவிடாமல் ட்விஸ்ட்களாலேயே படத்தை கோர்த்திருக்கிறார் இயக்குநர். அதற்கு பெரிதும் உதவியிருக்கிறது தியாகுவின் எடிட்டிங். அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது.
திரைக்கதை மேஜிக்கால் நெருப்புடா கவர்கிறது. த்ரில்லர் விரும்பும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
- ராஜிவ்