Just In
- 9 min ago
10 லட்சத்துக்கு ஆசைப்பட்டாரா ரியோ? 5 லட்சப் பெட்டியுடன் ஸ்மார்ட்டா எஸ்கேப்பான கேபி.. சூப்பர் கேம்!
- 41 min ago
3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
- 1 hr ago
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' ரீமேக்.. ஷூட்டிங்கில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
- 1 hr ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
Don't Miss!
- Sports
இரவு முழுக்க விவாதம்.. கவனமாக எடுக்கப்பட்ட அணி.. காலையில் வந்து பார்த்தால் அதிர்ச்சி.. ஷாக் சம்பவம்
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு கொலை.. ஒரு கொலையாளி.. பல மர்ம முடிச்சுகள்.. 'ராஜா ரங்குஸ்கி' விமர்சனம்!
சென்னை: காதலால் கொலைப் பழியில் சிக்கும் நாயகன், அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறான் என்பதை திரில்லிங்காக சொல்லி இருக்கும் படம் தான் ராஜா ரங்குஸ்கி.
காவல்துறையில் ஒரு சாதாரண காவலராக வேலை பார்க்கிறார் ராஜா (மெட்ரோ சிரிஷ்). தனியாக வசித்து வரும் முதியவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இவரது வேலை. அப்படி தனியாக வசித்து வரும் மரியாவின் (அனுபமா குமார்) வில்லாவுக்கு செல்லும் போது எழுத்தாளரான ரங்குஸ்கியை (சாந்தினி) காதலிக்க தொடங்குகிறார். ரங்குஸ்கிக்கு தன் மீது காதல் வர வைப்பதற்காக ராஜா செய்யும் வேலைகள் அவருக்கே வினையாகிறது. இந்நிலையில் மரியா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ராஜா மீது கொலை பழி விழுகிறது. உண்மையில் மரியாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடை தேடுகிறது படம்.
ஒரு த்ரில்லர் திரைப்படத்துக்கு தேவையான திரைக்கதையை பக்காவாக அமைத்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன். யார் கொலையாளி என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக்கூடாது என்பதற்காக பல டிவிஸ்ட்டுகளை வைத்திருக்கிறார். கதைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே படத்தில் வைத்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
முதல் பாதி செம ஷார்ப்பாக இருக்கின்றது. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகின்றன. அதேபோல தீவிர சினிமா ரசிகர்கள் இவர் தான் கொலையாளி என்பதை யூகித்துவிடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. போலீஸ் தொடர்பான காட்சிகளில் இன்னும் கூட டீடெயிலிங் செய்திருக்கலாம்.
பழங்காலத்து கத்தி, உலகின் முதல் பைபிள் அதற்கான சந்தை மதிப்பு என பல புரியாத விசயங்களை பற்றி படம் பேசுகிறது. ஆனால், அதை பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தியிருப்பதும் சிறப்பு.
படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை. 'பட்டுக்குட்டி நீதான்' பாடல் பார்வையாளர்களை படத்துக்குள் கைப்பிடித்து இழுத்து சென்றுவிடுகிறது. சாதாரண காட்சியை கூட வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது பின்னணி இசை.
படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு. யுவாவின் லைட்டிங்கும், கோணங்களும் கதை சொல்லலுக்கு மிகச்சிறந்த உதவியை செய்திருக்கிறது.
மெட்ரோ படத்தில் நடித்த சிரிஷ்க்கு அதே போன்றதொரு படம் தான் இதுவும். தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார்.
படத்தின் சர்ப்ரைஸ் கிப்ஃட் சாந்தினி தான். சின்ன சின்ன கண் அசைவுகளில் கிறங்கடிக்கிறார். சும்மா வந்து போகாமல், சூப்பர் பெர்பாமன்ஸ் தந்திருக்கிறார்.
கல்லூரி வினோத்திற்கு இப்படத்தில் காமெடி கேரக்டர். கொடுத்த வேலையை ஓரளவுக்கு சரியாக செய்திருக்கிறார். அனுபமா குமார், ஜெயக்குமார் ஜானகிராமன், சத்யா என அனைவருமே தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள். இதில் ஜெயக்குமார் ஜானகிராமன் மட்டும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.
படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதால் இரண்டாம் பாதி சிறிது அயர்வை ஏற்படுத்திவிடுகிறது. காமெடிக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும் லேசாக உறுத்துகிறது.
வெகு நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம். தவிர்க்காமல் பாருங்க மக்களே.