Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாட்டு எப்படி?
தீபாவளிக்கு நிறைய படங்கள் ரிலீஸாகப் போகுது. குறைந்தது எட்டுப் படங்கள் வரைக்கும் வெளியாகலாம். வரப் போகும் படங்களில் தலைமைவகிக்கப் போவது தெனாலி. காரணம், இரு கதாநாயகர்கள். ஒன்று கமல். மற்றொருவர் ஏ.ஆர். ரஹ்மான்.
தமிழ்ப் படங்களின் வெற்றிக்கு சமீப காலமாக பாடல்கள்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தீபாவளி ரிலீஸ் படங்களின் பாடல்களைப் பற்றிக்கொஞ்சம் பார்ப்போமா?
இதென்ன கலாட்டா என்று கேட்க வைக்கிறார் தெனாலி.
ஏ.ஆர்.ரஹ்மான் லண்டன் செல்லும் முன் இசையமைத்த கடைசிப் படம், கமல் பாடியிருக்கிறார், வைரமுத்து இல்லை, பல பாடல் ஆசிரியர்கள்எழுதியிருக்கிறார்கள்... இப்படி பல ஸ்பெஷல்கள் இந்தப் படத்திற்கு.
கமல் சும்மா பாடவில்லை பாட்டிலும் கூட நடித்திருக்கிறார். "ஆலங்கட்டி .. பிறைசூடனின் வரிகளுக்கு, சுஜாதாவுடன் சேர்ந்து கமல்கலக்கியிருக்கிறார். அதற்கு மேலாக ரஹ்மான். ஒரு இசை மழையாய் கொட்டியிருக்கிறார்.
"அத்தினி சித்தினி .. சுமாரான ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் வரிசையில் இதையும் சேர்க்கலாம். எழுதியது அறிவுமதி. என்ன என்னவோ வார்த்தைகள்வருகின்றன. முழுப் பாடலையும் கேட்க நினைக்க வேண்டாம். பிட்டு, பிட்டாக வார்த்தைகள் புரிகிறது. ஹரிகரன், சித்ரா, சிவராமன் பாடியிருக்கிறார்கள்.சித்ராவின் குரலை வளைத்திருக்கிறார் ரஹ்மான்.
"இஞ்சிரங்கோ .. பெண் கவிஞர் தாமரையின் வரிகளுக்கு, சித்ரா தலைமையில் ஒரு கும்பலே பாடியிருக்கிறது. கமல், கிளிண்டன், டொமினிக் என லிஸ்ட்நீளுகிறது. கமலின் குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது.
"போர்க்களம் .. கோபிகா, பூர்ணிமா, ஸ்ரீனிவாஸ் குரலில். பாடலை எழுதியது கலைக்குமார். ரோஜாப்பூ, சின்ன ரோஜாப்பூ என்ற அழகான பாடலைஎழுதியவர் கலைக்குமார் என்பதை நீங்கள் இன்னேரம் புரிந்திருக்கக் கூடும். நன்றாக இருக்கிறது.
"ஸ்வாசமே .. எஸ்.பி.பியின் வித்தியாசமான குரலில் அழகாக இருக்கிறது. துணைக்கு சாதனா சர்கம். புதுக் கவிஞர் பா.விஜய்யின் வார்த்தைகளில் மென்மைஅதிகம்.
சங்கர் மகாதேவனும் கலக்கியிருக்கிறார். படத்தின் தலைப்பிலேயே ஒரு பாடலை பாடுகிறார் இந்த உற்சாக மனிதர். கதையை, மலையூர் மம்பட்டியான்ஸ்டைலில், கொஞ்சம் மாடர்னாக கூறியிருக்கிறார்கள். பாட்டை எழுதியவர் இளைய கம்பன். கேட்கலாம்.
தெனாலி - பூனையை எலி விரட்டுவது மாதிரி வித்தியாசமாக இருக்கிறது.
சீனு ... வானவில் ...
வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...