Just In
- 39 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Watchman Review: ஒரு நாயும், ஜி.வி.யும் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்... வாட்ச்மேன்! விமர்சனம்
சென்னை: கடனை அடைப்பதற்காக ஒரு வீட்டிற்குள் திருட செல்லும் நாயகன், அங்கு ஒரு ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் கதைதான் வாட்ச்மேன் திரைப்படம்.
கந்து வட்டிக்கு கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். காதலி சம்யுக்தா ஹெட்டே உடன் மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் என்ற நிலையில், கடனை திரும்ப செலுத்தாவிட்டால் அது நின்றுபோகும் நிலை ஏற்படுகிறது. யாரிடம் கேட்டும் பணம் கிடைக்காத நிலையில், ஒரு பங்களாவில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு அவருக்கு ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அது என்ன ஆபத்து, அதில் இருந்து ஜி.வி.எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.
ஒரு பாராவுக்குள் முடியும் இந்த கதையை போலவே, திரைக்கதையையும் ஷார்ப்பாக அமைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். மொத்தம் ஒன்றரை மணி நேரம் தான் முழு படமும். அதனை விறுவிறுப்பாக சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் விஜய்.
முதல் பாதி படம் ஒரு நாளின் வெவ்வேறு நாளிகைகளில் முன்னும் பின்னுமாக பயணிக்கிறது. இது ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தினாலும், என்ன நடக்கிறது என்ற ஆவலை தூண்டுகிறது. இரண்டாம் பாதியில் சமமணிக்கு வரும்போது, படம் தெளிவான பாதையில் பயணிக்க தொடங்கி, விறுவிறுப்பாக நகர்கிறது.
கடந்த வாரம் ரிலீசான குப்பத்து ராஜா, இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அடுத்த படமும் ரிலீசாகி இருக்கிறது ஜி.வி.க்கு. இந்த படத்திலும் லோக்கல் பையனாக தான் வருகிறார். ஆனால் மெச்சூர்டாக நடித்திருக்கிறார். நாயைக் கண்டு பயந்து ஓடி, தண்டல்காரனை சமாளித்து, காதலியிடம் கெஞ்சி கூத்தாடி, பயங்கரவாதிகளுடன் மல்லுக்கட்டி என ஜி.வி.க்கு இந்த படத்தில் பெர்பாமன்ஸ் காட்ட வேண்டிய கட்டாயம் அதிகம். நன்றாகவே செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் டெரர் எண்ட்ரி கொடுத்து, போகப் போக தனது செய்கைகளால் ஷோ ஸ்டீலராக மாறிவிடுகிறது ப்ரூனோ (நாய்). தனது முதலாளி மீது ப்ரூனோ வைத்திருக்கும் விஸ்வாசமும், அவரை காப்பாற்ற விவேகத்துடன், அது செய்யும் வீரதீர செயல்களும் ரசிக்க வைக்கின்றன.
ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி ரோலில் கச்சிதமாக பொருந்துகிறார் சுமன். யோகி பாபு காமெடி இந்த படத்தில் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஷூட்டிங்கில் பேசிய வசனத்தை, டப்பிங்கில் மாற்றிருப்பது, பொருந்தாத உதட்டசைவின் மூலம் அப்பட்டமாக தெரிகிறது.
ஜி.வி.யே படத்தின் முழு பொறுப்பையும் பார்த்துக்கொள்வதால், ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டேவுக்கு வேலையே இல்லை. ஒருநாள் கால்ஷீட்டில் ஹீரோயினின் மொத்த காட்சிகளையும் முடித்திருக்கிறார்கள் போல.
யோகி பாபு விட்ட இடத்தை முனிஸ்காந்த் தான் நிறைவு செய்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் எடிட்டர் ஆண்டனி, கந்துவட்டிக்காரராக நடித்திருக்கும் ஸ்டண்ட் சில்வா உள்ளிட்டோரும் சில காட்சிகளின் ஃபில்லர்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். வில்லன் ராஜ் அர்ஜுன் பேருக்கு தான் வில்லனாக வருகிறார்.
பாடல்கள் இல்லை என்றாலும், தனது பின்னணி இசையால் படத்தை மெருகேற்றியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஒவ்வொரு ஃபிரேமையும் ரசித்து ரசித்து இசையமைதிருக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோ ஜி.வி.யின். பின்னணி இசைதான்.
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பங்களாவில், இருட்டு அறைகளில் நடக்கும் காட்சிகளில், ஒவ்வொரு ஃபிரேமும் மிரட்டலாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் ரேஸ் கார் போல் பறக்கிறது ஆண்டனியின் எடிட்டிங்கில்.
ஒரு நாளில் நடக்கும் சம்பவம் தான் படத்தின் கதை. ஆனால் அதனை முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி காட்டுவதால், தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. நேர்த்தியான திரைக்கதையில் கூட இதனை காட்சிப்படுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் 'வாட்ச்மேன்' ஒரு சூப்பரான திரில்லர் அனுபவம்.
Gangs of Madras review: ரத்தம் தெறிக்க தெறிக்க..ஆண்களை வேட்டையாடும் பெண் புலி.. கேங்ஸ் ஆப் மெட்ராஸ்