Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோடம்பாக்காத்துக்கு வெளியே ஒரு தமிழ் சினிமா!
இந்த நிலை எத்தனை சீக்கிரம் மாற்றப்படுகிறதோ, அப்போதுதான் ஆரோக்கியமான சினிமாக்கள், பொழுதுபோக்குகள் உருவாகும் வாய்ப்பு உருவாகும்.
உலகில் தமிழ்ப்பேசும் மக்கள் அதிகரிக்க அதிகரிக்க இத்தகைய நல்ல வாய்ப்புகளும் உருவாகத் துவங்கியுள்ளன.
சமீபத்தில் நார்வே தமிழர்கள் 'மீ்ண்டும்' என்ற முழு நீள தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கி திரையிட்டுள்ளனர். இன்னும் பல படங்கள் இப்படி உருவாகத் தொடங்கியுள்ளன.
பக்கத்து மாநிலமான புதுவையில்கூட புதிய தமிழ்ப்படங்களை கோடம்பாக்கத்தின் நிழலே இல்லாமல் உருவாக்கும் முயற்சிகள் அரசு ஆதரவுடன் நடந்து வருகின்றன.
அந்த வரிசையில், தீபாவளி வெளியீடாக கனடியத் தமிழர்களால் ஒரு படம் உருவாக்கப்பட்டுள்ளது. கனடிய ஈழத்து திரைப்படக் கலைஞர்களால் முதல் முறையாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கனடியத் திரையரங்குகளில் வெளியாகிறது.
'நிலா' என்ற இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க கனடிய மண்ணிலே தயாரிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த கனடியத் தமிழ்ப் பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை.
சுதன், நவநிதா, ரூபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களுடன் இயக்குனர் தரன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
சிறீஜீவன் இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் 'இதுவே எங்கள் நிலையா' என்ற ஈழத் தமிழர் படுகொலை பற்றிய பாடலை உருவாக்கியவர். சுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பன்னீர்செல்வம் படத்தொகுப்பு செய்துள்ளார். கந்தசாமி ஜெகன் தயாரித்துள்ளார்.