Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் மகேஷ்பாபு படப்பிடிப்பில் தெலுங்கானா ஆதரவாளர்கள் ரகளை - 70 லட்சம் சேதம்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் 'டூக்கூடு' படப்பிடிப்பு செட்டுக்குள் நேற்று தெலுங்கானா ஆதரவாளர்கள் புகுந்து தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்.
அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த வன்முறையில் ரூ.70 லட்சம் செட் நாசம் செய்யப்பட்டது. மேலும் மகேஷ்பாபு கார் உள்பட 7 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
ஆந்திராவில் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனும் தற்போதைய முன்னணி நடிகருமான மகேஷ்பாபு நடிக்கும் 'டூக்கூடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அருகே உள்ள விக்ராபாத் ரெயில் நிலையம் அருகே நேற்று காலை நடந்தது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்தை சீன ஒய்சாலா இயக்குகிறார். இதனை பார்க்க நடிகரின் ரசிகர்களும் அங்கு திரண்டு இருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக அந்த பகுதியில் ரூ.80 லட்சம் செலவில் பிரமாண்டமான 'செட்' போடப்பட்டிருந்தது. அதில் நடிகர் மகேஷ்பாபுவின் சண்டைக்காட்சியை இயக்குநர் படமாக்கி கொண்டு இருந்தார்.
அப்போது தெலுங்கானா மாணவர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானவர்கள் திடீரென்று படப்பிடிப்பு தளத்துக்குள் காலை 11 மணி அளவில் புகுந்து படப்பிடிப்பை நடத்தக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படப்பிடிப்பில் கடலோர ஆந்திராவினர் பங்கேற்க கூடாது என்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போடப்பட்டிருந்த செட்டுகளையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.
படப்பிடிப்புக்காக பாதுகாப்புக்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதைத்தொடர்ந்து வன்முறை கும்பலினர் திரும்பி சென்றனர். போராட்டக்காரர்கள் சென்ற பின்னர் போலீசாரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
மீண்டும் வன்முறை
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது தெலுங்கானா ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசாரும் இல்லாததால் அவர்களது வன்முறை தீவிரமானது. இதற்கு அங்கிருந்த நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரசிர்களுடன் மோதல்
இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அங்கிருந்த செட்டுகளை அடித்து நாசமாக்கினார்கள். படப்பிடிப்புக்காக வந்த நடிகர் மகேஷ்பாபு, இயக்குநர் உள்ளிட்டவர்களின் கார்களில் போராட்டக்காரர்கள் ஏறி அமர்ந்து கொண்டு அடித்து நொறுக்கினார்கள். இதில் அந்த கார்களின் கண்ணாடிகள் உடைந்தன. போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தால் அந்த இடம் போர்க்களமானது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து மீண்டும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். ஆனால் அதற்குள் போராட்டக்காரர்கள் படப்பிடிப்பு தளத்தை முழுமையாக அடித்து நொறுக்கி விட்டனர்.
நிலைமை மோசமானதைத்தொடர்ந்து போலீசார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் மகேஷ்பாபுவை வேறு ஒரு கார் ஏற்பாடு செய்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
ரூ.70 லட்சம் சேதம்
தெலுங்கானா ஆதரவாளர்களின் போராட்டத்தில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட் சேதப்படுத்தப்பட்டதில் ரூ.70 லட்சம் சேதம் அடைந்ததாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்தனர். இந்த வன்முறை வெளியாட்டத்தில் 7 கார்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!