Just In
- 5 min ago
ஒரு வழியாக ஷூட்டிங் ஓவர்.. மொத்த பட யூனிட்டுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த பிரபல ஹீரோ!
- 21 min ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் முதல் டிவிட்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
- 34 min ago
கப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்!
- 44 min ago
மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, மாஸ்டர்.. தமிழ்ப் படங்களின் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி!
Don't Miss!
- News
முதலில் விஷ தாக்குதல்... இப்போது கைது... இறுகும் பிடி.. சிக்கலில் நவல்னி
- Sports
எச்சரித்தது போல நடக்கிறது.. மொத்தமாக மாறிய சூழ்நிலை.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சிக்கல்!
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
30 ஆண்டுக்கு பின் வந்த புரடக்ஷன் கார்!

இன்றைக்கு வடிவேலு உட்கார்ந்துள்ள இடத்தில் அந்தக் காலத்தில் அம்சமாக அமர்ந்திருந்தவர் சுருளிராஜன். கிட்டத்தட்ட அத்தனை சூப்பர் ஸ்டார்களின் படங்களிலும் தவறாமல் இடம் பெற்றிருந்தவர் சுருளி.
அவர் இல்லாமல் ரஜினி, கமல் படங்கள் இல்லை என்று கூறும் அளவுக்கு இருவரது படங்களிலும் தவறாமல் நடித்து வந்தவர். குறிப்பாக ரஜினியின் படங்களில் தவறாமல் சுருளியைப் பார்க்கலாம்.
இன்றைக்கு பிரபலமாக இருக்கும் மதுரை ஸ்லாங் காமெடியை அன்றைக்கே பாப்புலராக்கியிருந்தவர் சுருளிராஜன்.
மறைந்த சுருளிராஜன் இப்போது வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் விவேக் மூலமாக. சுந்தர்.சி. நடிக்க, ஏ.வெங்கடேஷ் இயக்க, உருவாகும் வாடா படத்தில் சுருளிராஜன் கெட்டப்பில் நடிக்கிறார் விவேக்.
அவரது ஹேர்ஸ்டைல் உள்பட அப்படியே சுருளிராஜனை பிரதிபலிக்கும் வகையில் வேடமிட்டு நடிக்கும் விவேக், இப்படத்திற்காக ஒரு பெரிய சுருளிராஜனின் படத்தைக் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பு பல இடங்களில் தேடியும் படம் கிடைக்கவில்லை.
இறுதியில் சுருளிராஜனின் மனைவியை அணுகியுள்ளனர். கணவர் மறைவுக்குப் பின்னர் எந்த சினிமா நிறுவன காரும் தனது வீட்டுக்கு வராமல் இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் வீடு தேடி வந்ததால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் சுருளிராஜனின் மனைவி.
பூஜை அறையில் வைத்திருந்த பெரிய சைஸ் சுருளிராஜன் படத்தை எடுத்துக் கொடுத்து கண்ணீர் விட்டுள்ளார்.
முப்பது வருஷத்துக்கு முன் அவரை ஷூட்டிங்கிற்கு அழைப்பதற்காக எங்கள் வீட்டிற்கு புரொடக்ஷன் கார் வந்தது. அதன் பிறகு இப்போதுதான் புரொடக்ஷன் கார் வந்திருக்கிறது என உணர்ச்சிவசப்பட்டாராம் சுருளியின் மனைவி.
மேலும், விவேக்கைத் தொடர்பு கொண்ட அவர், அவரது கேரக்டரை படத்தில் பயன்படுத்துவதற்காக நன்றியும் கூறினாராம்.