Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பிரியாணி கொடுத்து பிச்சைக்காரியை கரெக்ட் பண்றியா? - நடிகரை வளைத்த மக்கள்
இந்தக் காட்சியை தத்ரூபமாகக் காட்ட, கேமராவை காருக்குள் மறைத்து வைத்து பொது மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் படமாக்கிக் கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரும், மக்களும் திமுதிமுவென கூடினர்.
"என்னய்யா, பிரியாணி கொடுத்து பிச்சைக்காரியை கரெக்ட் பண்றியா" என்று கேட்டபடி அடிக்கப் பாய, சற்று மிரண்ட ரமணா, தனது கெட்டப்பை விலக்கி, "நான் சினிமா ஹீரோ ரமணாங்க. இது ஷூட்டிங்..." என்றார்.
அதை யாரும் நம்பத் தயாராகவே இல்லை. 'யார்கிட்ட ரீல் விடுறே.. ஷூட்டிங்னா எங்கே கேமிரா? எங்கே 'ஹீரோயினி'? எங்கே டைரக்டர்... அட பெருசு பெருசா வண்டிங்க நிக்குமே... அதெல்லாம் எங்கய்யா?' என்று மடக்க, அதுவரை காருக்குள் மறைந்திருந்த டைரக்டரும் மற்றவர்களும் ஓடிவந்து நிலைமையை விளக்கினர்.
அதன்பிறகே கூட்டம் கலைந்து போயிருக்கிறது.
இதுவே எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றிதானே என்கிறார் புதிய இயக்குநர் சம்பத் ஆறுமுகம். இந்தக் காட்சி எடுக்கப்பட்டது காந்திக் கணக்கு என்ற படத்துக்காக.
நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்கும் காந்திய வழியிலான தீர்வு என்ன என்பதே படத்தின் மையக் கரு. முன்னா பாய் ஸ்டைலா என்றால், இல்லை இது நம்ம ஸ்டைலு என்கிறார் மகா தன்னம்பிக்கையுடன்.
அவர் கூறுகையில், "மூக்கு கண்ணாடி, கைத்தடி, கதர் ஆடை என காந்தியை தெரியும். பாரிஸ்டர் பட்டம் வாங்கி, கோட்டு சூட்டு போட்ட மிடுக்கான வழக்கறிஞர் காந்தியை பெரும்பாலும் தெரியாது. இந்த பாத்திரப் படைப்பில் உருவானதே காந்தி கணக்கு ஹீரோ ரமணாவின் கேரக்டர்.
நம் நாட்டில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்னையை சொல்லி, அதற்கு சரியான தீர்வும் கூறி, 'இதுதான் காந்தி கணக்கு" என்று சொல்வதே கதை.
எம்.பி.ஏ மாணவன், சமூக மாற்றத்துக்கு எப்படி உதவுகிறான் என்பது மையக்கரு. ஹீரோ, ஹீரோயின் தவிர படத்தின் முதல்பாதியில் வரும் கேரக்டர்கள், அடுத்த பாதியில் வராத அளவுக்கு திரைக்கதை இருக்கும். வில்லனே இல்லாத படம் இது. நாடு மாற வேண்டுமானால், வீடு மாற வேண்டும். எந்த மாற்றமும், சேவையும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்கிறோம்..." என்றார்.
பூஜா பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகனாக ரமணாவும், நாயகியாக மும்பையைச் சேர்ந்த ரிச்சா சின்ஹாவும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.