வாம்மா ராசாத்தி: மானபங்கப்படுத்தப்பட்ட நடிகையை கைதட்டி வரவேற்ற படக்குழு
திருவனந்தபுரம்: மானபங்க சம்பவத்திற்கு பிறகு முதன்முதலாக படப்பிடிப்புக்கு வந்த நடிகையை கைதட்டி பாராட்டி வரவேற்றுள்ளது ஆதம் படக்குழு.
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். அந்த சம்பவத்தால் அதிர்ந்து போய் நடிக்க தயங்கிய அவருக்கு நடிகர் ப்ரித்விராஜ் தான் ஊக்கமளித்துள்ளார்.

இதையடுத்து நடிகை ப்ரித்விராஜ் ஜோடியாக நடிக்கும் ஆதம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு பிறகு படப்பிடிப்புக்கு வந்த நடிகையை பார்த்ததும் படக்குழுவினர் கைதட்டி பாராட்டி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதை பார்த்து நடிகை நெகிழ்ந்துள்ளார். நடிகைக்கு ப்ரித்விராஜ் அளிக்கும் ஆதரவை பார்த்து பிற நடிகைகள் பெருமிதம் கொண்டுள்ளனர். நடிகையின் சம்பவத்திற்கு பிறகு பெண்களை கிண்டல் செய்யும் வசனங்களை பேசி நடிக்க மாட்டேன் என்று ப்ரித்விராஜ் அறிவித்துள்ளார்.
ப்ரித்விராஜின் முடிவை கேட்டு சிலர் வரவேற்றுள்ளனர் சிலர் கிண்டல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











