ஷூட்டிங்ஸ்பாட்டில் அம்மா மடியில் உட்காரும் நடிகை
சென்னை: நடிகை ஆனந்தி இன்னும் தனது தாயின் மடியில் அமர்வதாக நடிகர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பண்டிகை. பண்டிகை பட விழாவில் கிருஷ்ணா, ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணா கூறியதாவது,
ஆனந்தி படப்பிடிப்பு தளத்தில் சமத்தாக இருப்பார். எந்த வம்புக்கும் போக மாட்டார். அவர் சம்பந்தப்பட்ட காட்சி முடிந்த கையோடு ஓடிப் போய் அம்மா மடியில் உட்கார்ந்துவிடுவார் என்றார்.
ஆனந்தி வளர்ந்தாலும் இன்னும் சிறு குழந்தை தான். அம்மா பொண்ணு என்றார் கிருஷ்ணா.
Comments


Click it and Unblock the Notifications