ஆந்திரா ரசிகர்கள் மீது கோபத்தில் பைரவா படக்குழு
சென்னை: ஆந்திராவில் தங்கியிருக்கும் பைரவா படக்குழு ரசிகர்கள் மீது கோபத்தில் உள்ளதாம்.
பைரவா படத்தின் சண்டைக் காட்சிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் பட ஷூட்டிங் என தெரிந்து ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகிறார்களாம்.

படப்பிடிப்பை பார்க்க வரும் ரசிகர்கள் தங்களின் செல்போன்களில் சகட்டு மேனிக்கு புகைப்படங்களை க்ளிக்கித் தள்ளுவதுடன் அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்களாம்.
படத்தோட லுக்கெல்லாம் இப்படி வெளியாகிறதே என்று ரசிகர்கள் மீது படக்குழு கோபத்தில் உள்ளதாம். ரசிகர்களை விரட்டவும் முடியாமல் படப்பிடிப்பு தளத்தில் செய்வதறியாது விழிக்கிறது படக்குழு.
முன்னதாக பொள்ளாச்சியில் ரசிகர்கள் கூட்டம் கூடியதை பார்த்த விஜய் படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு சென்னைக்கு கிளம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











