Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படப்பிடிப்பில் விபத்து: லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் ஜி.வி.பிரகாஷ்
சென்னை: படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் லேசான காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். அடுத்தடுத்து 2 ஹிட்களின் மூலம் அரை டஜன் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் படப்பிடிப்பு நேற்று திண்டிவனம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
இதில் ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி இருவரும் காரில் செல்வது போலவும், வில்லன்கள் இருவரையும் துரத்துவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது.
இந்தக் காட்சியின்போது நெடுஞ்சாலையில் வந்த கண்டெய்னர் ஒன்று ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி சென்ற காரின் மீது மோதியது.
இதனால் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருக்கும் தடுப்புச்சுவரின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டது.
தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரையும் பரிசோதனை செய்த பின் பெரிதாக எந்த அடியும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.
அதன்பின் ஜி.வி.பிரகாஷ், ஆர்ஜே பாலாஜி இருவரும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தற்போது படப்பிடிப்பில் நேர்ந்த இந்த விபத்து கோலிவுட்டில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.