Don't Miss!
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வெயிலுக்குப் பயந்து பாகுபலி 2 படப்பிடிப்பு 2 வாரங்கள் தள்ளி வைப்பு
கடும் வெயில் காரணமாக பாகுபலி 2 படத்தின் ஷூட்டிங்கை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி.
இந்தக் கோடையில் தமிழகத்தில் மட்டுமல்ல, அதை விட அதிகமாக வெயில் சுட்டெரிப்பது ஆந்திராவிலும்தான்.
ஹைதராபாத்தில் நேற்று 113 டிகிரி வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் 110 டிகிரியைத் தாண்டியதுடன் அனல் காற்று வீசியது. இன்னும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை தகவல் மையம் எச்சரித்து உள்ளது.
பாகுபலி2 படப்பிடிப்பில் ஏராளமான துணை நடிகர்கள் கடும் வெயிலில் பங்கு பெறுகிறார்கள்.
இந்த படத்தில் பிரபாஸ், ரானா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் வெயிலில் மேக்கப்போடு நடிக்க கஷ்டமாக உள்ளதாகக் கூறினர்.
இதன் காரணமாக நடிகைகள் பங்கேற்கும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் மற்ற பணிகள் வழக்கம்போல் நடக்கும் என்றும் பிரபாஸ், ராணா ஆகியோரின் உடற்பயிற்சி தினமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகுபலி-2 படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.