Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமல்ஹாசனின் சுனாமி
தசாவதாரம் படத்திற்காக கடலோரத்தில் செட் போட்டு சுனாமியால் பாதிக்கப்பட்டது போன்ற பகுதியை பிரமாண்டமாக உருவாக்கி அசத்தி வருகிறார்களாம்.
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்க உருவாகி வரும் படம் தசாவதாரம். படத்தின் முக்கால்வாசி காட்சிகளை ஷூட் செய்து முடித்து விட்டனர். மீதமுள்ள காட்சிகளை சென்னையில் வைத்து சுடவுள்ளனர்.அதில் முக்கியமான ஒரு காட்சி சுனாமி. இந்தக் காட்சியை தத்ரூபமாக கொண்டு வர வேண்டும் என்பதற்காக சென்னை ராயபுரம் அருகே கடலோரத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கவுள்ளனர்.
கடலையே செட் போட்டு படம் பிடிக்கவுள்ளனராம். இதுவரை இப்படி ஒரு கடல் செட் இந்திய சினிமா வரலாற்றில் போடப்பட்டதில்லை என்கிறார்கள். தோட்டாதரணியின் கைவண்ணத்தில் இந்த கடல் செட் போடப்படுகிறது.
பரிந்து விரிந்த கடல், சுனாமியால் சேதமடைந்த வீடுகள் போல செட் போடப்படுகிறதாம். இந்தப் பணி படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். படத்தின் மிகவும் முக்கியமான ஹைலைட்டான காட்சியாக இது இருக்குமாம்.
இதுதவிர மேலும் சில காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அதை முடித்து விட்டால் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறுமாம்.
அனைத்துப் பணிகளையும் முடித்து வருகிற தீபாவளியன்று தசாவதாரத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.