Don't Miss!
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாளவிகாவின் பிரமாண்ட ஆட்டம்
டான்ஸில் பின்னி எடுத்து, இளம் நெஞ்சங்களில் பிரளயத்தை ஏற்படுத்துவதில் கில்லாடியான மாளவிகா, கல்யாணமான பின்னரும் கூட தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை.
திருமணத்திற்குப் பிறகும் கூட அவர் சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதை தட்டுவதே இல்லை. அப்படிப்பட்ட மாளவிகாவின் அசத்தல் ஆட்டம், முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில், இளவேனில் இயக்கத்தில், வினீத், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் இடம் பெறுகிறது.
உளியின் ஓசை படத்தின் நாயகன், நாயகி முதல் அனைத்துக் கலைஞர்களையும் கருணாநிதியே சிறப்புக் கவனம் செலுத்தி தேர்வு செய்தார். இப்படத்தின் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தியும் வருகிறார்.
இப்படத்தில், நூற்றுக்கணக்கான சிற்பங்களுக்கு நடுவே பிரபல நடனக்காரப் பெண் நடனம் ஆடுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே பிரமாண்ட செட் போட்டு ஒரு வாரமாக படமாக்கியுள்ளனர். இப்படி ஒரு பிரமாண்ட செட் போட்டு தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாகி விட்டதாம்.
இந்தப் பாட்டுக்குத்தான் மாளவிகா ஆடியுள்ளார்.