Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீராவும் தாமினியும்
அதிலும் பாடல் காட்சிகளில் புதுமையைக் காட்ட நம்மவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
ஜெயம் படத்தில் ரவியை கயிற்றில் கட்டி தொங்க விட்டு ஹீரோயின் சதாவுடன் டூயட் பாட வைத்தார்கள். அந்த வரிசையில் அறிவுமணிபடத்தில் வித்தியாசமான முதலிரவுக் காட்சியை வைத்துள்ளார் இயக்குனர் கென்னடி.
ஹீரோ முரளிக்கு, ஹீரோயின் மீரா வாசுதேவனுடன் முதலிரவு. வழக்கம் போல எல்லா ஐட்டங்களும் ரெடியாக இருக்க டூயட்டைஆரம்பிக்கிறார்கள் முரளியும், மீராவும்.
இந்த இடத்தில்தான் வித்தியாசத்தை புகுத்துகிறார் கென்னடி. கதாநாயகனான முரளிக்கு மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் நேரமாகபார்த்து முன்னாள் காதலியான தாமினி நினைவுக்கு வந்துவிடுகிறார்.
இதனால் மனைவியுடன் சந்தோஷ டூயட் பாடும் முரளி, கூடவே கனவில் தாமினியுடனும் டூயட் பாடுகிறார்.
மனைவியுடனும், காதலியுடனும் அவர் விரக தாபத்துடன் மாறி மாறிப் பாடும் டூயட் காட்சிகளில் கவர்ச்சியையும் சேர்த்து வித்தியாசமானமுதலிரவாக அமைத்துள்ளார் கென்னடி. இந்தப் பாடலில் மீராவும் கன்னடத்தைச் சேர்ந்த தாமினியும் போட்டி போட்டுக் கொண்டுஜமாய்த்திருக்கிறார்களாம்.
(நல்லவேளை இரண்டு பேரையும் ஒரே ரூமில் வைத்து முதலிரவு நடத்தாமல் விட்டார்களே)
இந்தப் படத்தில் மீரா வாசுதேவனுக்கு மேலும் இரு உட்டாலங்கடி ஆட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் கவர்ச்சியில் அதீத தூக்கல்காட்டி அசத்தியிருக்கிறாராம் மீரா.
இந்தப் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்ட இயக்குனர் கென்னடி, அடுத்து கவனம் செலுத்தி வரும் படம் ஒளி. இந்தப் படத்திலும் முரளிதான் ஹீரோ. நீண்ட நாட்களாகவே கிடப்பில் போடப்பட்ட ப்ராஜெக்டுக்கு மீண்டும் ஒளி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதில் முரளிக்கு ஜோடியாக தெலுங்கில் பிரபலமான பூனத்தை களமிறக்குகிறக்கியுள்ளார் கென்னடி. ஏற்கனவே பூனத்தை வைத்துஎடுக்கப்பட்ட காட்சிகளில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அசத்தியிருந்தார்.
இப்போது வாய்ப்பில்லாமல் சும்மா இருக்கும் பூனம், மீண்டும் சான்ஸ்களைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறார். இதனால்படத்தில் முழுப் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறாராம்.