Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படப்பிடிப்பில் குண்டு பாய்ந்து மோகன்லால் காயம்
சென்னையில் நடந்த மலையாளப் படப்பிடிப்பின்போது டம்மி துப்பாக்கி குண்டு நடிகர் மோகன்லாலின் கண் அருகே குண்டு பாயந்தது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் தற்போேபாது அலிபாய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நவ்யா நாயரும், கோபிகாவும் நடிக்கிறார்கள்.அலிபாய் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. பின்னி மில் வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் ஷூட்டிங் நடைபெறுகிறது. அங்கு மோகன்லாலும், வில்லனும் மோதுவது போன்ற காட்சியைப் படமாக்கினர்.
நேற்று மாலை இந்தப் படப்பிடிப்பு நடந்தது. வில்லனாக நடித்த ஆர்யமான் கையில் டம்மி குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி கொடுக்கப்பட்டது. ஆர்யமான் சுடும்போது மோகன்லால் குனிந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் ரெடியான பின்னர் இயக்குநர் ஆக்ஷன் என குரல் கொடுத்தார். அப்போது ஆர்யமான் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார். மோகன்லாலும் குனிந்தார். நான்காவது முறையாக ஆர்யமான் சுட்டபோது குறி தவறி மோகன்லாலின் கண் அருகே பாய்ந்தது.
மோகன்லால் வலியால் அலறித் துடித்தார். உடனடியாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு மோகன்லால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.