Don't Miss!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
‘ஐ’ படத்தோட கிளைமாக்ஸ் ஷூட்டிங் கீழ்ப்பாக்கம் பக்கத்துல நடக்கப்போகுதாமே...
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படமான 'ஐ' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே, முக்கால்வாசி முடிந்து விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் படமாக்கப் படவேண்டி இருக்கிறதாம். அதனை சென்னையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.
ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெற்றிநடை போட்ட படம் 'அந்நியன்'. தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது இந்த வெற்றிக்கூட்டணி. படத்தின் நாயகி எமி ஜாக்சன்.
ஷங்கர் படமென்றாலே பிரமாண்டம் இருக்கும். அது கதையின் ஓட்டத்திலாகட்டும், காட்சியிலுமாகட்டும் பிரதிபலிக்கும். இந்நிலையில் தனது பிளாக்கில் ஐ படத்தின் படப்பிடிப்பு பற்றி லேட்டஸ்ட்டாக கொசுறு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷங்கர். அதில்....
கிளைமாக்ஸ் தான் பாக்கியாம்...
ஐ படத்தின் படப்பிடிப்புகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் பட இருக்கிறது.
சென்னையில் கிளைமாக்ஸ்...
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அருகில் படமாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கடின உடற்பயிற்சியில் விக்ரம்...
இந்த இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க எப்படியும் ஒருமாத காலம் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏனென்றால் கிளைமாக்ஸ் காட்சிக்குத் தேவையான உடற்கட்டைப் பெற விக்ரம் கடின உடற்பயிற்சியில் உள்ளார்.
காத்திருத்தல் பயனுள்ளது...
ஏற்கனவே பட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டு வெகு நாட்கள் ஆகிறது. இப்போது விக்ரமிற்காக படவேலைகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. ஆனால், இந்தக் காத்திருப்பின் பலன் அர்த்தமுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
விக்ரமின் தலைமறைவு வாழ்க்கை...
ஐ படத்திற்காக விக்ரம் கடந்த சில காலமாக ஜிம்மிற்கும் வீட்டிற்கும் நடையாய் நடந்து வருகிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதனால் தான் சமீபத்தில் எந்த விழாவிலும் விக்ரமைப் பார்க்க முடிவதில்லை.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!