Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
48 ஆண்டுகளுக்குப் பிறகு பட்சிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு
பட்சிராஜா ஸ்டுடியோ மிக பழமையானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், ஜெமினிகணேசன் உள்ளிட்ட பழைய கதாநாயகர்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளது.
பத்மினி சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, உள்ளிட்ட பழைய நடிகைகளும் இந்த ஸ்டூடியோவில் தங்கி நடித்துள்ளனர்.
எம்.ஜி.ஆரின் மலைக் கள்ளன் படத்தின் பெரும் பகுதி காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டன. சென்னையில் புதிய ஸ்டூடியோக்கள் உருவானதால் பட்சிராஜா ஸ்டூடியோ களை இழந்தது. அங்கு படப்பிடிப்புகள் நடக்க வில்லை.
48 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாணி என்ற படத்தின் படப்பிடிப்பு பட்சி ராஜா ஸ்டூடியோவில் இன்று காலை நடந்தது.
இந்த படத்தின் காட்சிகள் சிறுவாணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. கோவை எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் உருவாகும் காதல் கதை இது.
படப்பிடிப்பு குறித்து இசையமைப்பாளர் தேவா கூறும்போது, பட்சிராஜா ஸ்டூடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. இதில் காந்திபுரம் என்ற பாடல் கோவை நகரை மையமாக கொண்டதாகும், என்றார்.