Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'பெப்சி' தொழிலாளர் பிரச்சினை: படப்பிடிப்பு ரத்து
திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சம்பள உயர்வு பிரச்சினை காரணமாக ஒரு தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பெயர், 'பொன்மாலைப் பொழுது.' கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, பெங்களூரில் நடைபெற்று வந்தது.
திடீரென்று, "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தீர்மானித்துள்ளபடி சம்பள உயர்வு கொடுத்தால்தான் வேலை செய்வோம்'' என்று படப்பிடிப்பில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கூறியதால், பெங்களூரில் நடைபெற்று வந்த 'பொன்மாலைப்பொழுது' படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள்.
நாளொன்றுக்கு ரூ 350 முதல் 500 வரை பெற்று வந்த ஊழியர்கள் தற்போது ரூ 2000 சம்பளம் கோரியுள்ளனர்.