Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சைலன்ட் சிம்பு
சிம்பு வர வர ரொம்ப நல்ல பிள்ளையாகி வருகிறாராம். எல்லாம் காதல் ஏற்பட்ட மோதல்களும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும்தான் காரணம் என்கிறார்கள்.
பொடி மட்டை வயதிலிருந்தே நடித்து வருபவர் சிம்பு. வளர்ந்து வாலிபனாகிய பின்னர் படு வேகமாக ஹீரோவாக உயர்ந்து, திறமையான இயக்குநராகவும் மாறி விட்டார் சிம்பு.வல்லவன் படத்திற்குப் பிறகு சிம்புவின் ரேஞ்சே வேறு மாதிரியாகி இருக்கிறது. பெர்சனல் சைடிலும் சிம்புவிடம் நிறைய மாற்றம்.
முன்பெல்லாம் சிம்பு பட ஷூட்டிங் என்றாலே அவரது கலாய்ப்புகளுக்கும், கலகலப்புகளுக்கும், சீண்டல்களுக்கும் பஞ்சமே இருக்காது.
ஆனால் நயனதாரா மேட்டரில் சிக்கி மீண்ட பின்னர் சிம்புவிடம் நிறைய மாற்றம் தெரிகிறதாம். படப்பிடிப்பு தளங்களில் படு அமைதியாக காணப்படுகிறாராம் சிம்பு.
தேவையில்லாமல் ஹீரோயின்களிடம் பேசுவது, கலாய்ப்பது போன்றவற்றை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டாராம் சிம்பு. செட்டுக்கு முதல் முறையாக வரும்போது அனைவரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்கிறார். அத்தோடு சரி, பேக்கப் ஆகி வீடு திரும்பும் வரை தான் உண்டு, தன் வேலையுண்டு என்று மட்டுமே இருக்கிறாராம்.
காளை படப்பிடிப்பின்போது சைலன்ட்டான சிம்புவைப் பார்க்க முடிந்தது. ஹீரோயின் வேதிகாவிடம் ஷாட்டின்போது மட்டுமே ஜாலியாக பேசுகிறார். ஷாட் முடிந்தவுடன் கம்மென்று ஆகி விடுகிறார்.
தேனியில் முகாமிட்டுள்ள காளை டீம், படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஷாட்டையும் திட்டமிட்டு சுட்டு வருகிறாராம் இயக்குநர் தருண் கோபி. சிம்பு சிறப்பாக ஒத்துழைப்பதாகவும், இதுவரை ஒரு பிரச்சினை கூட எழவில்லை என்றும் காளை யூனிட்டிலிருந்து செய்தி கசிந்துள்ளது.
காளையை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறாராம் சிம்பு. வல்லவனுக்குப் பிறகு நடந்த கசப்பான அனுபவங்களிலிருந்து மீள காளையின் வெற்றி அவசியம் என்று கடுமையாக உழைக்கிறாராம் சிம்பு.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!