Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சூட்டிங் ஸ்பாட்
சிம்புவின் மன்மதன் படத்தில் மும்பை கவர்ச்சிப் புயல் மந்திரா பேடி நடிக்கிறார்.
சிலம்பரசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மன்மதன் படத்தில் சிம்புவுக்கு பிளேபாய் கேரக்டராம்.ஏகப்பட்ட அழகிகளுடன் அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.
ஜோதிகா சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தற்போது மந்திரா பேடியும் நடிக்கவுள்ளார். உலகப் கோப்பைகிரிக்கெட் நடந்தபோது, காம்பியரிங் பண்ணுகிறேன் பேர்வழி என்று அரைகுரை ஆடையுடன் தோன்றி, ரசிகர்களை குண்டக்கமண்டக்க ஜொள்ளு விட வைத்தவர் மந்திரா பேடி.
இவரை சிம்பு முதன் முறையாக தமிழுக்கு அழைத்து வருகிறார். மாடலிங், காம்பியரிங், பாலிவுட் என படு பிசியாக இருக்கும்மந்த்தரா தென்னிந்தியப் படங்களில் நடிக்க மறுத்தவர். ஆனாலும் சிம்பு மும்பை சென்று, மந்த்ராவைச் சந்தித்து கதைசொல்லியிருக்கிறார்.
கதையைக் கேட்டதும் மந்த்ரா பேடி ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகி விட்டார். இந்த சின்ன வயதில் இவ்வளது திறமையா என்றுசிம்புவை பாராட்டியதோடு உடனே கால்ஷீட்டும் கொடுத்து விட்டார். இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறாராம்மந்த்ரா பேடி. மனநல டாக்டர் வேடமாம்.
இதற்காக சென்னை வந்திருந்த மந்திரா பேடி, சிம்புவுடன் படுநெருக்கமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.கவர்ச்சியில் எப்போதும் குறை வைக்காத மந்த்ரா பேடி ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பது வாசகர்களுக்கு ஒரு துயரமானசெய்தி.
இப்போது தானே சொந்தமாக கதை, வசனம், திரைக்கதை எழுதி இந்தப் படத்தில் நடிக்கிறார். படம் ஓடியே ஆக வேண்டும்என்பதற்காக கவர்ச்சி அதிகம் இருக்கும்படி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மந்த்ராவை பிடித்ததும் அதற்காகத்தான்.