அழுக்குச் சட்டையுடன் ஜீவா.. சற்றும் சம்பந்தம் இல்லாமல் நயன்தாரா.. முடிந்தது திருநாள்

By Manjula

சென்னை: ஈ படத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் ஜீவா - நயன்தாரா இருவரும் மீண்டும் 9 வருடங்கள் கழித்து இணைந்திருக்கும் திரைப்படம் திருநாள்.

இயக்குநர் பி.எஸ். பிரமோத் இயக்கி வந்த இத்திரைபடத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து உள்ளன, கும்பகோணத்தை கதைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ஆக்க்ஷன் படமாக உருவாகியிருக்கிறது.

ஜீவா இந்தப் படத்தில் ரவுடியாகவும், நயன்தாரா டீச்சராகவும் நடித்திருக்கின்றனர், யான் திரைப்படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின்னர் ஜீவா நடித்து வரும் படமென்பதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது திருநாள் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இருக்கின்றன, இறுதிநாள் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படப்பிடிப்புக் குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.

ஜீவா ரத்தக்கறை படிந்த சட்டையுடன் அமர்ந்திருக்க அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் அருகில் அழகாக அமர்ந்திருக்கிறார் நயன்தாரா, சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது இந்தப் புகைப்படம்.

திருநாள் ஜீவாவிற்கு திருநாளாக மாறுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X