தூங்கா வனம் படப்பிடிப்பு முடிந்தது... கேக் வெட்டி கொண்டாடிய கமல்!
கமல் ஹாஸன், த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் தூங்கா வனம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததாக இன்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.
ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமல் ஹாஸன் தயாரித்து, திரைக்கதை எழுதி நடித்துள்ள படம் தூங்கா வனம்.

ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சுகா வசனம் எழுதியுள்ளார். பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் சீகட்டி ராஜ்யம் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்திந் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையிலும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலும் நடந்தது.
வைரமுத்து எழுதி, ஜிப்ரான் இசையில் கமல் பாடிய ஒரு பாடலுடன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை, கேக் வெட்டி கொண்டாடினர் கமல் ஹாஸன் மற்றும் குழுவினர்.


Click it and Unblock the Notifications











