Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புகைக்கும் காட்சி வேண்டாம்-அஜீத்துக்கு அன்புமணி கடிதம்
இது குறித்து அவர் அசல் படத்தின் கதாநாயகன் அஜித், தயாரிப்பாளர்கள் ராம்குமார், பிரபு, இயக்குநர் சரண் ஆகியோருக்கு எழுதிய கடிதம்:
சிறுவர்களையும், இளைஞர்களையும் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்துக்கு அடிமையாக்க சிகரெட் நிறுவனங்கள் முயல்கின்றன. இதற்காக திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா ஆகியோர் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். ஏ.வி.எம். நிறுவனமும் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என அறிவித்திருக்கிறது.
எனவே தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி, அசல் படத்தில் மிகக் குறைவான காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்குமானால், அவற்றில் புகைப்பழக்கத்துக்கு எதிரான வாசகங்கள் இடம்பெறுமாரு பார்த்துக் கொள்ளவும். அக்காட்சிகள் படத்தின் கதையம்சத்தில் முக்கியமில்லாததாக இருக்கும் எனில் அவற்றை நீக்கிவிடுங்கள்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று அசல் படத்தின் பேனர்கல் வைக்கப்பட்டிருந்த ங்கம் திரையரங்கம் முன்பு பாமகவினரும், பசுமை தாயகத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.