Don't Miss!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் கடவுளில் நர மாமிசம்?
நான் கடவுள் படம் பூஜை போடப்பட்ட நாளிலிருந்தே நாளொரு வதந்தியம், பொழுதொரு பரபரப்புமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போது கிளம்பியுள்ள புதிய வதந்தி இதுவரை வந்த வதந்திகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரியாகவும், திகிலைக் கிளப்பும் விதத்திலும் உள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக் காட்சி சமீபத்தில் காசியில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக இயக்குநர் பாலா அறிவித்துள்ளார். இந்த காட்சியில், மனிதனைக் கொன்று அவனுடைய மாமிசத்தையே சாப்பிடுவது போன்ற ஒரு கொடூரமான சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நான் கடவுள் யூனிட் ஆட்கள் சிலர் தெரிவித்தனர்.
ஆனாலும், இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த பதிலையும், இயக்குநர் பாலா தரப்பிலிருந்து பெற முடியவில்லை. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், படத்தைத் தயாரிக்கும், சிவஸ்ரீ சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பாலாவிடம் தயவுசெய்து இம்மாதிரி கிளைமேக்ஸை வைத்து விடாதீர்கள். எதற்கும் மாற்று கிளைமேக்ஸ் ஒன்றை தயார் வைத்து கொள்ளவும் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்களாம்.
பாலாவும் பெரிய மனது பண்ணி, இப்போது 2வது கிளைமேக்ஸ் காட்சிக்கு மீண்டும் காசிக்கு செல்லப் போகிறாராம்.