விவாகரத்து வழக்கு: கோர்ட்டில் பேரரசு ஆஜர்

பிரபல இயக்குநர் பேரரசு. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி சாந்தி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேரரசுவும், சாந்தியும் நேரில் ஆஜரானார்கள்.
இருவரிடமும் அரை மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் வழக்கை 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











