Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'டிராப் தி மித்ரா'!
முன்பு ஆப்தமித்ரா என்று படம் எடுத்தார் இயக்குநர் பி வாசு. அந்தப் படத்தின் நாயகி சௌந்தர்யா அகாலமாக இறந்து போக, நிஜமாகவே நஷ்டப்பட்டது கலையுலகம். அந்தப் படம்தான் சந்திரமுகி. ரஜினிக்கு மிக நெருங்கிய நடிகை சௌந்தர்யா என்பது நினைவிருக்கலாம்.
அடுத்து ஆப்தரக்ஷகா என்று அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து, படம் முடியும் தறுவாயில் மரணத்தைத் தழுவினார் விஷ்ணுவர்தன். படத்தின் நாயகன் இவர். அது மட்டுமல்ல, ரஜினிக்கு நெருங்கிய நண்பர்.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழில் செய்யலாமா வேண்டாமா என்று கூறுகிறேன். அதுவரை எதுவும் இதைப் பற்றி வெளியில் பேச வேண்டாம் என்றுதான் ரஜினி வாசுவிடம் சொல்லியிருந்தாராம்.
ஆனால் விஷ்ணுவர்தன் மறைவுச் செய்தி வந்ததும் இடிந்துபோன ரஜினி, தனது நெருங்கிய நண்பனின் இறுதி ஊர்வலத்துக்கும் கூட போகாமல் சென்னையிலேயே இருந்துள்ளார்.
பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுவர்தன் பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்த வாசுவிடம், "இந்தப் படத்தை நாம தமிழ்ல பண்ண வேண்டாம் வாசு. இப்படியொரு எண்ணத்தையே ட்ராப் பண்ணிடுங்க.." என்றாராம்.
தனக்கு வேண்டியவர்களிடம் இந்த விஷயத்தை வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்கிறாராம் வாசு.