Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
டி.எம்.எஸ்சுக்கு அழகிரியின் பாராட்டு விழா-கருணாநிதி பங்கேற்பு
மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு மதுரை புதுநத்தம் சாலையில் சந்திப்பில் (பாண்டியன் ஓட்டல் பின்புறம்) முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சிறப்பு விழா நாளை காலையில் நடைபெறுகிறது.
மாலை தமுக்கம் மைதானத்தில் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சௌந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மு.க.அழகிரி செய்துள்ளார்.
இந்த இரு விழாக்களிலும் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மாலை தூத்துக்குடியி்ல் இருந்து மதுரை வருகிறார். அவருக்கு மதுரை தி.மு.கவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.
வரவேற்று நிகழ்ச்சிக்குப் பின்னர் காலையில் நடைபெறும் விழாவில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சிலையை திறந்து வைத்துப் பேசுகிறார்.
மாலையில் டி.எம்.சௌந்திரராஜனுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார். இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
மு.க.அழகிரி அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார். விழாவில் இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, பாடலாசிரியர்கள் வாலி, வைரமுத்து, இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விசுவாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோர் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
டி.எம்.சௌந்திரராஜன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.
மதுரையில் பலத்த பாதுகாப்பு:
இதற்கிடையே முதல்வரின் வருகையையொட்டி மதுரையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல தீவிரவாதிகள் பிடிபட்டுள்ள நிலையில் முதல்வர் தூத்துக்குடி, மதுரையில் பயணம் மேற்கொண்டுள்ளதால் சுமார் 3,000 போலீசார் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் விழாவில் இன்று அவர் பங்கேற்கிறார்.
-
Aadujeevitham Day 1 collection: ஒரு சராசரி மனிதனின் உண்மைக்கதை.. ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல்!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!