Don't Miss!
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
17000 பேர் பங்கேற்பு... விடிய விடிய நடந்த ஜூனியர் என்டிஆர் திருமணம்
அதிகாலை 2.41 மணிக்கு மணமகளுக்கு தாலி கட்டினார்.
ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்டிஆரின் பேரன் ஜூனியர் என்டிஆர். இவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜூனியர் என்.டி.ஆர். -லட்சுமி பிரணதி திருமணம் இன்று அதிகாலை 2.41 மணிக்கு நடந்தது. திருமணத்துக்கான ஹைதராபாத் அருகே உள்ள மாதா பூரில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
ரூ 22 கோடி செலவில் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நடிகர்-நடிகைகள் பலர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு மெகா விருந்து பரிமாறப்பட்டது. இன்று அதிகாலை முகூர்த்த சடங்கு துவங்கின. ஜூனியர் என்.டி.ஆர். சந்தன கலரில் பட்டு வேட்டி -சட்டை அணிந்து இருந்தார். லட்சுமி பிரணதி அதே நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த பட்டுச்சேலை அணிந்து இருந்தார்.
முதலில் மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் முகூர்த்தத்துக்காக தங்கம் இழைக்கப்பட்ட மண மேடையில் ஜூனியர் என்.டி.ஆர் அமர்ந்தார். அவர் அருகில் லட்சுமி பிரணதியை அழைத்து வந்து அமர வைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர். எழுந்து நின்று லட்சுமி பிரணதிக்கு தாலி கட்டினார்.
அப்போது கூடி இருந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர் கள், ரசிகர்கள் உள்பட 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். விடிய விடிய விருந்து பரிமாறப்பட்டது. இன்று காலையிலும் விருந்து தொடர்ந்தது. ரசிகர்கள் பலரும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்பட்டனர்.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!