Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
செந்தில் மகனுக்கு 'அம்மா' வாழ்த்து!
நடடிகர் செந்திலின் மகன் மணிகண்டபிரபுவுக்கும், ஜனனி பிரிய வந்திதாவுக்கும் சமீபத்தில் மதுரையில் திருமணம் நடந்தது.
நேற்று சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
செந்தில் அதிமுகவில் இருந்தாலும் கூட, அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாகவே செந்தில் மகன் கல்யாணத்திற்கு ஜெயலலிதா வர மாட்டார் எனக் கூறப்பட்டது. செந்திலும் கூட ஜெயலலிதாவின் வருகை குறித்து செய்தி எதுவும் போட வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் கோரிக்ைக விடுத்திருந்தார்.
திருமணத்திற்குத்தான் வரவில்லை. வரவேற்புக்காவது வருவாரா ஜெயலலிதா என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் போல செந்திலுக்கும் இருந்தது.
ஆனால் செந்திலுக்கு இன்ப அதிர்ச்சியூட்டும் வகையில் ஜெயலலிதா முதல் ஆளாக வந்து அசத்தி விட்டார்.
பெரிய மலர்க்கொத்தும், பரிசும் கொடுத்து புதுமணத் தம்பதியை ஜெயலலிதா ஆசிர்வதித்தார். சுமார் கால் மணி நேரம் அமர்ந்திருந்து கல்யாணம் எப்படி நடந்தது என்று செந்திலிடம் விசாரித்தார். திருமணத்திற்கு வர முடியாததையும் செந்திலிடம் ஜெயலலிதா விளக்கினார்.
பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அம்மா வந்து தனது மகனையும், மருமகளையும் ஆசிர்வதித்தது செந்திலுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. வரவேற்புக்கு வந்திருந்தவர்களிடம் அதைச் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுப் போனார் செந்தில்.