Don't Miss!
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
முதல்வர் முன்னிலையில் தமிழை மென்று துப்பிய குஷ்பு!
அவர் குஷ்பு.
இந்த விழாவைத் தொகுத்து வழங்க ஒரு தமிழ் தொகுப்பாளர் கூட இல்லையே என்று அனைவரும் ஆதங்கப்படும் அளவுக்கு தமிழைக் கடித்துக் குதறித் துப்பினார் இந்த முன்னாள் பாலிவுட் நடிகை.
2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தான் தொகுத்து வழங்கினார்.
ஆரம்பம் முதலே, தமிழை தப்பும் தவறுமாக அவர் உச்சரித்தார். அவர் தவறாக உச்சரிக்கும்போதெல்லாம் கூட்டத்தினர், 'ஓவென்று' குரல் எழுப்பி தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
ஒருகட்டத்தில், உச்சரிப்புப் பிழைகள் மிகவும் அதிகரித்தபோது, கூட்டத்தில் இருந்தவர்கள், மீண்டும் கத்தினார்கள். இதை முதல்வர் கருணாநிதியும் கவனித்தார்.
உடனே குஷ்பு, "இது தமிழுங்க. 30 பேஜ் (பக்கங்கள்) இருக்கு. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" என்று கெஞ்சினார்.
வள்ளுவர் என்று சொல்வதற்கு பதிலாக 'வலுவர்' என்றும், 'குத்தகைதாரர்' என்பதற்கு பதிலாக 'குத்துகைகாரர்' என்றார். 'உளியின் ஓசை' என்று சொல்வதற்கு மாறாக, 'ஒளியின் ஓசை' என்றார்.
இவ்வாறாக தமிழை பாடாய்படுத்திய குஷ்பு, ஒரு கட்டத்தில், "பெரியாரின் கொள்கைகளை" என்று சொல்வதற்கு பதிலாக "பெரியாரின் கொள்ளைகளை" என்றதும் அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஆனாலும் விழா குழுவினர் அசராமல் அனுமதித்தனர் குஷ்புவை.
இந்த நேரத்தில், சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்காக முதல்வர் கருணாநிதியின் பெயரை அறிவிக்கும் நேரம் வந்தது.
உடனே உஷாரான அமைச்சர் பரிதி இளம்வழுதி, அவசர அவசரமாக குஷ்புவின் தமிழ்க் கொலையை நிறுத்தச் சொன்னார்.
முதல்வர் பற்றிய முன்னுரையை தானே அறிவித்தார். மேலும் மேடையிலிருந்தும் குஷ்பு கீழே சென்றுவிட்டார் (இறக்கப்பட்டார்?). அதன்பிறகு, நிகழ்ச்சியின் இறுதிவரை அமைச்சரே தொகுத்து வழங்கினார்.
பின்னர் தனது சிறப்புரையில் இதைக் குறிப்பிடத் தவறவில்லை முதல்வர்.
'தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்" என்றார்.