Don't Miss!
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பட தலைப்பை மாற்றும் பாக்யராஜ்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இந்தி பட கலைஞர்கள் ஷம்மி கபூர், பி.சி.பரூடா, குருதத், மெஹபூப் கான் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை விஸ்டம் ட்ரீ பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.
இதற்கான விழா சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடந்தது. புத்தகங்களை, தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் வெளியிட, டைரக்டர்கள் பாலு மகேந்திரா, கே.பாக்யராஜ், சிவாஜி மகன் ராம்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் பாக்யராஜ் பேசியதாவது:
எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன், புதிய சினிமா படங்களுக்கு பிரபலமான பழைய பட தலைப்பை வைக்கக் கூடாது என்றார். நானும் கூட அந்தத் தவறை செய்திருப்பதை உணர்ந்து கொண்டேன். என் மகன் நடிக்க, நான் இயக்கும் படத்துக்கு என் குருநாதரின் பழைய படமாக புதிய வார்ப்புகள் தலைப்பைச் சூட்டியிருக்கிறேன்.
பழைய தலைப்பை புதிய படத்துக்கு வைக்கும்போது அந்த படம் வெற்றி பெற்றால் பரவாயில்லை. இல்லாவிட்டால் அதே பெயரில் வந்த பழைய படத்தின் பெயரும் கெட்டுவிடும்.
புரட்சித் தலைவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் மிகப் பெரிய வெற்றிப் படம். அந்த பெயரை இப்போது ஒரு படத்துக்கு வைத்து, அது ஓடாமல் போனால், அடுத்த சந்ததிகளுக்கு எந்த உலகம் சுற்றும் வாலிபன் ஒடவில்லை என்ற குழப்பம் வரும். தியோடர் பாஸ்கரன் பேச்சுக்கு பிறகு புதிய வார்ப்புகள் தலைப்பை மாற்ற யோசித்துக் கொண்டிருக்கிறேன், என்றார் பாக்யராஜ்.
இயக்குனர் பாலு மகேந்திரா பேசுகையில், தியோடர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிவாஜி கணேசன் புத்தகத்தை தமிழில் வெளியிடுவேன், என்றார். ஏவி.எம் சரவணன், தியோடர் பாஸ்கரன், அருணா வாசுதேவ், யூகிசேது உட்பட பலர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.