Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மனிதநேயம்.. கலைஞர்களுக்கு எம்.எஸ்.வி. அறிவுரை
மெகா தொலைக்காட்சி சார்பில், 'ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம்' என்ற பெயரில் விஜிபி தங்க கடற்கரையில் கோடை திருவிழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
என் பாடலின் நண்பர் ஆர்மோனிய பெட்டிதான். பாட்டுக்குத்தான் தபேலா வாசிக்க வேண்டுமே தவிர, தபேலாவிற்கு பாட்டுப் பாடக் கூடாது.
எவ்வளவு பெரிய கலைஞனாகவும் ஒருவர் இருக்கலாம். ஆனால் மனிதநேயம்தான் இறுதியில் அவரை அடையாளம் காட்டும்.
முன்னோடிகளை மதித்து, எல்லோரும் சந்தோஷத்துடன், சங்கீதத்துடன், அடக்கத்துடன், நன்றி கடனுடன் வாழ வேண்டும் என்று கலைஞர்களுக்கு தமது பாடலுடன் அறிவுரை வழங்கினார்.
இந்த கோடை திருவிழாவில், சின்னத்திரை நட்சத்திரங்கள், டிங்கு-கவி, சுரேஷ்வர்-ஸ்வேதா, ராகவ்-ப்ரீத்தா, ராஜ்காந்த்-கிருத்திகா ஜோடி குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சாதக பறவைகளின் இசைக்குழுவினரின் மெல்லிசைக் கச்சேரியும் இடம்பெற்றது. இதில் மாணவ மாணவிகள் மேடையேறி பாடல்களைப் பாடினர்.
மனோ, சிவகார்த்திகேயன், தனசேகரன் குழுவினர் தங்களது பலகுரல் வித்தைகள் மூலம் நேயர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஜார்ஜ் மற்றும் பிருந்தாதாஸ் தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, விஜிபி சந்தோஷ், மெகாடிவி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?