Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'அச்சமுண்டு அச்சமுண்டு'..வெளியி்ட்ட பூக்குட்டி
அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. இப்படத்தின் ஆடியோ கேசட் வெளியிட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.
விழாவில் தனது பிசியான வேலைகளுக்கு நடுவில் ஆஸ்கர் விருது வென்ற ரெசூல் பூக்குட்டி கலந்து கொண்டு பாடல் கேசட்டை வெளியிட்டார். அந்த பாடல் கேசட்டை படத்தின் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரி பவாதாரிணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாலு மகேந்திரா கூறுகையில், அருண் வைத்தியநாதன் தனது முதல் முயற்சியையே சிவப்பு சிந்தனையுடன் ஆரம்பித்துள்ளார் என்றார்.
உலக நாயகன் கமலஹாசன் உடனான தனது முதல் சந்திப்பின் அனுபவத்தையும் அதன் மூலம் நான் கற்று கொண்ட விஷயங்களையும் விழாவுக்கு வந்திருந்தவர்களுடன் ரெசூல் பூக்குட்டி பகிர்ந்து கொண்டார்.
பாடல் கேசட் வெளியிட்டு முன்னதாக படத்தின் டிரைலரும், மூன்று பாடல்களும் திரையிடப்பட்டது. விழாவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் திரண்டு வந்திருந்த போதிலும் படத்தின் நாயகன் பிரசன்னா, நாயகி சினேகா ஆகியோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்ததில் அவர்கள் விழாவுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.