Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நல வாரியம் அமைத்த கருணாநிதிக்கு நன்றி - தமிழ் திரையுலகம்
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் விடுத்துள்ள அறிக்கை:
"தமிழ் திரையுலகம் இன்று செழித்தோங்கி, சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் 100 நேரடி தமிழ் திரைப்படங்கள் தயாராகி வருவதற்கும், இந்த வருடம் டிசம்பருக்குள் 125 படங்களுக்கு மேல் வெளிவந்து சாதனை படைப்பதற்கும் காரணம், முதல்-அமைச்சர் கலைஞர் அளித்த கேளிக்கை வரி முற்றிலும் ரத்து, படப்பிடிப்பு கட்டணங்கள் குறைப்பு போன்ற சலுகைகள்தான் என்றால், அது மிகையாகாது.
இதற்கும் ஒரு படி மேலாக திரைப்பட துறையினருக்கு 116 ஏக்கர் இடம் ஒதுக்கி, ஆணை பிறப்பித்ததற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..."
கே.ஆர்.ஜி.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கே.ஆர்.ஜி, செயலாளர்கள் காட்ரகட்ட பிரசாத், ஆனந்தா சுரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:
"தமிழ் திரைத்துறையின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் தமிழக அரசிடம் அளித்த கோரிக்கையை ஏற்று, திரைப்பட துறையினர் நல வாரியத்தினை அமைத்து, அதில் தமிழ் திரைப்பட துறையை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக நியமித்தற்காக, எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..."
வி.சி.குகநாதன்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் விடுத்துள்ள அறிக்கை:
"தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் கலைஞருக்கு 'கலையுலக படைப்பாளி' பட்டம் வழங்கி, பாராட்டு விழா நடத்தினோம். அந்த விழாவில் பேசிய கலைஞர், திரைப்பட துறையினருக்கு இடம் ஒதுக்கி வீடு கட்டி தரப்படும் என்று ஒரு தாயின் கருணையோடு அறிவித்தார். சொன்னபடியே 116 ஏக்கர் இடம் (முற்றிலும் இலவசம்!) ஒதுக்கி ஆணைப்பிறப்பித்துள்ளார்.
அதேபோல் திரையுலகினரின் நலன் காக்க, திரைப்பட துறையினர் நலவாரியத்தினை இன்று தமிழக முதல்வர் கலைஞர் அமைத்துள்ளார். அதற்கு தொழிலாளர் குடும்பங்களின் சார்பில் கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்