Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'ஜோதா அக்பருக்கு' எதிர்ப்பு-வன்முறை
அக்பரின் காதல் கதைதான் ஜோதா அக்பர். இதில் அக்பரின் 3வது மனைவியாக ராஜபுத்திர இளவரசி ஜோதா சித்தரிக்கப்பட்டுள்ளார். இதுதான் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.
ராஜபுத்திர இளவரசியான ஜோதா, அக்பரின் மகன் சலீமின் மனைவி. அப்படி இருக்கையில் வரலாற்றைத் திரித்து, ராஜபுத்திரர்களின் மரியாதையை இழிவுபடுத்தி விட்டனர் என்று ராஜபுத்திர சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் அக்பரின் 3வது மனைவிதான் ஜோதா என்று கூறுகிறார் படத்தின் இயக்குநர் அசுதோஷ். இதற்கு வரலாற்று சான்றுகளையும் அவர் முன் வைக்கிறார்.
இருந்தாலும் ராஜபுத்திரர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் படத்தைத் திரையிட மாட்டோம் என எச்சரித்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. சில மாநிலங்களில் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் ராஜஸ்தான் அரசு தடை விதிக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் ஒரு மல்டிபிளக்ஸ் வளாகத்தில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது திடீரென தியேட்டர் வளாகத்திற்குள் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் திரையைக் கிழித்து ரகளையில் இறங்கினர்.
கட் அவுட்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. இதையடுத்து படம் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள் சிதறி ஓடினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் போராட்டம் நடந்தது. நரோடா என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தியேட்டருக்கு ஊர்வலமாக வந்து படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் உரிமையாளருக்கு அடி விழுந்தது. தியேட்டருக்குள் புகுந்த கும்பல் இருக்கைகளை கிழித்து நாசப்படுத்தியது. இதனால் படம் நிறுத்தப்பட்டது.
பாட்னாவில் படம் ஓடிய தியேட்டருக்குள் ஜன கல்யான் மஞ்ச் என்ற அமைப்பினர் புகுந்து ரகளை செய்தனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ராஜபுத்திரர் இனத்தினர் அதிகம் பேர் உள்ளனர். அங்கு கடும் எதிர்ப்பு நிலவி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சில இடத்தில் மட்டுமே படம் திரையிடப்பட்டுள்ளது.
போபாலில் ஒரு தியேட்டரில் 50-க்கும் மேற்பட்டோர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் ஜோதா அக்பர் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.