Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்.... சர்ச்சைப் படம் எடுத்த மலையாள இயக்குநர்!
சொத்தை விற்று அணை கட்டிய பென்னி குக்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது முல்லைப் பெரியாறு அணை. ஆங்கிலேயர்தான் என்றாலும் பென்னிகுக் என்ற மக்கள் நல விரும்பியால் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்தின் ஜீவாதாரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அணை கட்டும் பணியின்போது நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணை கட்டினாராம் பென்னி குக்.
நமது நாட்டுக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பென்னி குக் இப்படி ஒரு மகா சேவையைச் செய்தார். ஆனால் இந்த அணையை இடித்துத் தள்ளி விட்டு, தான் ஒரு அணையை கட்டி தன்னிடம் தமிழகத்தை கெஞ்ச வைக்க வேண்டும் என்ற நோக்கில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த அணை ஸ்திரத்தன்மை இல்லாதது என்றும், இந்த அணை உடையும் அபாயம் உள்ளதாகவும், கற்பனையாகக் கூறிக் கொண்டு, பல ஆண்டுகளாக பிரச்சினை செய்துவரும் கேரளா, இதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக கூறி வருகிறது. இதற்காக டேம் உடைவது போல ஒரு கிராபிக்ஸ் சிடியையும் வெளியிட்டு பரபரப்பு செய்தது.
ஆனால் தமிழகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வைகோ போன்ற தலைவர்கள் முழு வீச்சில் இப்பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
வம்பை வளர்க்கும் ஆங்கிலப் படம்
இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் காட்சிகளைக் கொண்ட ஒரு படம் வெளியாக இருக்கிறது.
அதுதான் 'டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம். இந்தியாவில் வரும் வெள்ளிக்கிழமை இந்தப் படம் வெளியாகிறது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
'100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரளாவைச் சேர்ந்த மாலுமி
கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.
'இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்' என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் சோஹன் ராய்.
தமிழர்கள்தானே சாகப் போகிறார்கள்
இந்த அணை உடைவதால் தமிழர்கள்தான் சாவார்கள் என்றும் கூறுகிறார் சோஹன் ராய்.
ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள 'டாம்ஸ்' டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இவர் படம் எடுத்துள்ளார்.
'டேம் 999' படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார் (இது சில ஆண்டுகளுக்கு முன் வந்த நோவாஸ் ஆர்க் ஆங்கிலப் படத்தின் மையக் கருத்து). அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நேரடித் தாக்குதலா என்ற கேள்விக்கு சோஹன் ராய் அளித்துள்ள பதில் இது:
"நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.
அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும்," என்றார்.
ஆக, முல்லைப் பெரியாறுக்கு எதிரான பரப்புரையை சினிமா மூலமும் தொடங்கியிருக்கிறார்கள் கேரளத்துக்காரர்கள்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்