Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிரத்னத்துக்கு கேரளா நிபந்தனை!
மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ், இந்தியில் உருவாகும் படம் ராவணா. அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மலையத்தூர் வனப்பகுதியில் நடந்து வந்தது.
ஆனால் வனப்பகுதியை சீரழித்து விட்டதாக கூறி படப்பிடிப்புக்கு கேரள அரசின் வனத்துறை தடை விதித்தது. மேலும் மணிரத்தினத்தின் படக்குழுவினர் மீது வழக்கும் பதிவு செய்தது.
இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கேரள அரசுக்கு மணிரத்தினம் கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த கேரள அரசு தற்போது சில புதிய நிபந்தனைகளுடன் படப்பிடிப்பைத் தொடரலாம் என அனுமதித்துள்ளது.
மணிக்கு கேரள அரசு போட்டுள்ள நிபந்தனைகள்
- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஷூட்டிங் நடத்தலாம்.
- தினசரி வாடகை ரூ. 10 ஆயிரம் ஆகும் (முன்பு ரூ. 1000 மட்டுமே வசூலித்தனர்)
- படப்பிடிப்பின்போது 150 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
- வனப் பகுதிக்குள் 15 வாகனங்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படும்.
- பெரிய பெரிய செட்களை போடக் கூடாது.
- குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பாக டைனமைட், டெட்டனேட்டர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
- காட்டுக்குள் உள்ள விலங்குகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தரக் கூடாது.
இவைதான் மணிரத்தினத்திற்குப் போடப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள். இவற்றை ஏற்றுக் கொள்வதாக மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.
முன்பு படப்பிடிப்பு தொடங்கியபோது காட்டுக்குள் ஏகப்பட்ட குடில்களை அமைத்த படப்பிடிப்புக் குழுவினர், ஏராளமான மரங்களையும் வெட்டியதால் வனத்துறை ஆத்திரமடைந்தது. மேலும் 300க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அந்த இடமே சீரழிந்து போய் விட்டதாகவும் வனத்துறை குற்றம் சாட்டியது என்பது நினைவிருக்கலாம்.