Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இளைஞர் காங். தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் 'குத்து' ரம்யா திடீர் விலகல்
நடிகை குத்து ரம்யா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் கடந்த ஏப்ரல் மாதம் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். க்ர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
கட்சியில் சேர்ந்து 6 மாத காலத்திற்குள் ஒரு நடிகை மூத்த தலைவரைப் போல் செயல்படுவதாக மேலிடத்திற்கு புகார்கள் சென்றன. தலைவர் பதவிக்கு ஒரு கவர்ச்சி நடிகை போட்டியிடக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
கட்சியில் ரம்யாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் உள்ளது. இருப்பினும் அவருக்கு எதிராக குரல்கள் ஒலி்த்தன. இந்நிலையில் ரம்யா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ரம்யா ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.