twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளைஞர் காங். தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் 'குத்து' ரம்யா திடீர் விலகல்

    By Siva
    |

    Ramya
    பெங்களூர்: கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து நடிகை ரம்யா திடீர் என்று விலகியுள்ளார். காங்கிரஸின் பிறவிக் குணமான கோஷ்டிப் பூசல் காரணமாக ரம்யா விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது.

    நடிகை குத்து ரம்யா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீதுள்ள பற்றால் கடந்த ஏப்ரல் மாதம் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். க்ர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

    கட்சியில் சேர்ந்து 6 மாத காலத்திற்குள் ஒரு நடிகை மூத்த தலைவரைப் போல் செயல்படுவதாக மேலிடத்திற்கு புகார்கள் சென்றன. தலைவர் பதவிக்கு ஒரு கவர்ச்சி நடிகை போட்டியிடக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    கட்சியில் ரம்யாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியும் உள்ளது. இருப்பினும் அவருக்கு எதிராக குரல்கள் ஒலி்த்தன. இந்நிலையில் ரம்யா தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.

    வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரை அவர் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ரம்யா ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

    English summary
    Actress Ramya has withdrawn from Karnataka Pradesh Youth Congress(KPYC) president election which will be held on october 12. Posters are displayed against her. Her suddenly withdrawal from the election makes her supporters unhappy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X