Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அமிதாப், ஷாருக்-அன்புமணி கோரிக்கை
ரஜினிகாந்த் புகை பிடிக்கக் கூடாது என்று முன்பு அன்புமணி கோரிக்கை விடுத்தார். தற்போது ரஜினி தனது படங்களில் புகை பிடிப்பது போல நடிப்பதில்லை. அதேபோல சமீபத்தில் விஜய்க்கும் இதே கோரிக்கையை வைத்தார் அன்புமணி. அவரும் ஏற்றுக் கொண்டார். சிம்புவும் தானாகவே இனி தம் கிடையாது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கும் இதே கோரிக்கையை வைத்துள்ளார் அன்புமணி. இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமா நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் முதல் முறையாக சிகரெட் புகைக்க 52 சதவீத குழந்தைகள் கற்றுக் கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று நடிகர் ஷாருக்கானிடம் நான் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளேன் (ஆனாலும் ஷாருக் விட்டது போலத் தெரியவில்லை. சமீபத்தில் கூட கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் ஜாலியாக பப் இழுத்து சலசலப்பை ஏற்படுத்தினார்). மீண்டும் அவருக்கு நான் இதே கோரிக்கையை விடுகிறேன்.
நடிகர் அமிதாப்பச்சனிடமும், சினிமாவில் புகை பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஒடு படத்துடன் எச்சரிக்கை வாசகம் இருந்தால் அது நல்ல பலனை தரும். அரசியல் காரணங்களாலும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாலும் அந்த திட்டத்தை அமுல்படுத்த முடியவில்லை.
இந்தியாவில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அபாயகரமான அளவில் உள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளில் இது குறைந்து வருகிறது என்றார் அன்புமணி.