Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிஷ்யனுக்கு மார்க் போட்ட கே.பி!
கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்த ஜி.சிவா, தனம் என்ற புதிய படத்தை தயாரித்து, டைரக்டு செய்து இருக்கிறார். இது குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தாசியின் கதை. இதில், தாசியாக உயிர் சங்கீதா நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கிரீன் பார்க்கில் நடந்த்து. முதல் இசைத் தகடை கே.பாலசந்தர் வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் பெற்றுக்கொண்டார். அப்போது பாலசந்தர் பேசியதாவது:
என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. என் படத்தின் கதைகளை நான் யாரிடமும் விவாதிப்பதில்லை. முழுசாக் கூட சொல்ல மாட்டேன். காரணம் பலரிடம் கதையைச் சொன்னா நம்மை குழப்பி விடுவார்கள். நடிகர்-நடிகைகளிடம், நடிக்க வேண்டிய காட்சிகளை மட்டுமே சொல்வேன்.
தனம் படத்தில், நான் இயக்கிய அரங்கேற்றம் படத்தின் சாயல் இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன். ஆனால் சிவா என்னிடம் கதையைச் சொன்னார். அப்போது பத்து மார்க்கு கொடுக்கிற அளவுக்குத்தான் படம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் முழு படத்தையும் பார்த்துவிட்டு அசந்துபோனேன்.
இந்தப் படத்துக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. அதைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் நாளெல்லாம் பேசலாம். 10 மார்க்குகள் போட இருந்த என்னை 65 மார்க்குகள் போட வைத்து விட்டார் சிவா.
படம் நன்றாக இருந்தாலும், சிலர் 41 மார்க்கு அல்லது 42 மார்க்குகளுக்கு மேல் கொடுப்பதில்லை. ஆனால், நான் இந்த படத்துக்கு 65 மார்க்குகள் கொடுக்கிறேன்!
படப்பிடிப்பின்போது அதிக டேக் எடுப்பதிலும், மூன்று நான்கு காமிராக்களைப் பயன்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. சிலர் பதினெட்டு டேக் எடுத்து, கடைசியில் முதல் டேக்கைப் பயன்படுத்துவார்கள். மூன்று காமிராக்கள் எதற்கு? எது வேண்டுமோ, அதை மட்டும் எடுத்தால் போதாதா?
உயிர் படத்தில் சங்கீதா உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைப் பார்த்து நான் அசந்து போனேன்.
என்னுடைய அரங்கேற்றம் படத்துக்கு வந்த சலசலப்பு இந்த படத்துக்கும் வரும். சினிமாவில் இந்த மாதிரி சலசலப்புகள் இல்லாமலிருந்தால்தான் அதிசயம். ஆனால் அதையெல்லாம் பார்த்து பயப்படக்கூடாது என்றார் பாலச்சந்தர்.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத் தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.