Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரீ-மிக்ஸ்: 'மூளை கெட்டவங்க வேலை'-டி.எம்.செளந்தரராஜன்
டி.எம்.செளந்தரராஜனுக்கு பாராட்டி விழா நடத்தவுள்ளார் முதல்வரின் மகன் மு.க. அழகிரி. இந் நிலையில் மதுரையில் உள்ள அழகிரியின் வீட்டிற்குச் சென்ற டி.எம்.செளந்தரராஜன் அவருக்கு நன்றியும் பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார்.
பின்னர் டிஎம்எஸ் கூறுகையில்,
எனது வயதுக்கும், குரலுக்கும் சம்பந்தம் கிடையாது. இது முருகன் கொடுத்த குரல். முருகன் பக்தியையும் அவனது அருளும் தான் என்னை காப்பாற்றி வருகிறது. அவனது அருளாசிகளை பரப்ப வந்த நான் அன்புக்கு மட்டுமே அடிமை. எனக்கு காக்கா பிடிக்க தெரியாது.
நாட்டில் நாத்தீகன், ஆத்தீகன் என்று யாரும் கிடையாது. அனைவரும் கடைசியில் ஆண்டவனிடம் தான் செல்கிறோம்.
திமுக தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. அழகிரிக்கும் நன்றி உணர்வும், பாசமும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி நல்லாட்சி நடத்தி வருகிறார்.
அந்த காலத்தில் நான் சினிமா பாடல்களை பாடியதற்கு ரூ.500 மட்டுமே சம்பளமாக தரப்பட்டது. ஆனால் இன்று என்னை பாட வைத்து ரூ.1 லட்சம் வரை கொடுக்கின்றனர்.
எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள். அவர்களுடன் நெருங்கி பழகிய நண்பர்களில் நானும் ஒருவன். பெரும்பாலும் அனைத்து நடிகர்களுக்காவும் நான் பாடியுள்ளேன்.
தற்போது பழைய சினிமா பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் நாசப்படுத்தி வருகின்றனர். இது மூளை இல்லாதவர்கள் செய்யும் செயல் என்பதையே காட்டுகிறது. பழைய பாடல்களை நாசம் செய்யும் இவர்களது தரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்.
பேட்டியின் போது மு.க. அழகிரியின் வேண்டுகோளுக்கினங்க நீ எங்கே, என் நினைவுகள் அங்கே என்ற பாடலை ெசளந்தரராஜன் பாட கைதட்டி ரசித்தார்.